பதிவு செய்த நாள்
21 மார்2020
04:22
மும்பை, : ‘ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ்’ பேங்க், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதாக இருந்ததை, தள்ளி வைத்துள்ளது.
‘கொரோனா’ வைரஸ் தாக்குதல் அச்சம் காரணமாக, பங்குச் சந்தைகள் அதிகளவிலான ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகின்றன. பங்குச் சந்தைகளின் இந்த போக்கு காரணமாக, ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதை தள்ளி வைத்துள்ளது.இந்நிறுவனம், புதிய பங்குகள் வெளியீட்டின் மூலமாக, 1,000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டிருந்தது. இதில், 550 கோடி ரூபாய் மதிப்புக்கு புதிய பங்குகளையும், நிறுவனர்கள் வசம் இருக்கும், எட்டு கோடி பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது.
இந்த பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை, மூலதன தேவையை அதிகரித்துக் கொள்ளவும், வளர்ச்சி நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் பயன்படுத்த திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதை தள்ளி வைத்துள்ளதாக, இந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, இதற்கு முன், ‘ரொசாரி பயோடெக், பர்கர் கிங் இந்தியா’ ஆகிய இரண்டு நிறுவனங்கள், தங்களது புதிய பங்கு வெளியீட்டை தள்ளிவைத்து விட்டன. இப்போது மூன்றாவதாக, ஈக்விடாஸ் பேங்கும் பங்கு வெளியீட்டை தள்ளி வைத்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|