பதிவு செய்த நாள்
21 மார்2020
04:29
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களாக, சரிவைச் சந்தித்த பங்குச் சந்தைகள், நேற்று எழுச்சி பெற்றன. மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ நேற்று, 1627 புள்ளிகள்
உயர்ந்தது.
உலக நாடுகள், ‘கொரோனா’ தாக்குதலால் ஏற்படும் பொருளாதார சரிவை தடுக்கும் விதத்தில் எடுத்து வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, பங்குச் சந்தைகள் உயர்ந்தன.
உள்நாட்டைப் பொறுத்தவரை, பிரதமர் மோடி, கொரோனாவால் பாதிக்கப்படும் துறைகளுக்கு உதவ, சிறப்பு நடவடிக்கை குழு அமைக்கப்படும் என அறிவித்துள்ளதை அடுத்து, சந்தையில் சாதகமான நிலை ஏற்பட்டது.
வர்த்தகத்தின் இடையே, 2485 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ், வர்த்தகத்தின் இறுதியில், 1627.73 புள்ளிகள் உயர்ந்து, 29915.96 புள்ளிகளில் நிலைபெற்றது. இதேபோல், தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’ 482 புள்ளிகள் அதிகரித்து, வர்த்தகத்தின் இறுதியில், 8745.45 புள்ளிகளில் நிலை பெற்றது. நேற்றைய வர்த்தகத்தில், ஓ.என்.ஜி.சி., நிறுவன பங்குகள், 18 சதவீதம் அளவுக்கு உயர்வைக் கண்டன. இதையடுத்து, எச்.யு.எல்., அல்ட்ராடெக் சிமென்ட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டி.சி.எஸ்., எச்.டி.எப்.சி., ஐ.டி.சி., ஏஷியன் பெயின்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள், அதிக விலை உயர்வை கண்டன. மாறாக, எச்.டி.எப்.சி., பேங்க், இண்டஸ்ட்இண்ட் பேங்க் ஆகிய நிறுவன பங்குகள், விலை சரிவை கண்டன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|