பதிவு செய்த நாள்
24 மார்2020
14:04
‘கொரோனா’ அச்சுறுத்தல் எதிரொலி யாக, முகக்கவசமும், சானிடைசரும், அத்திவாசியப்பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் விற்பனை, நாடு முழுவதும், 500 மடங்கு அதிகரித்துள்ளது; ஆயிரம் மடங்கு அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
தமிழகத்தில், சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாநகரங்களில், இவற்றுக்கான தேவை பெருமளவு அதிகரித்துள்ளது. மால்கள் உள்ளிட்ட வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டபோதும், மாநிலம் முழுவதும் உள்ள, தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்கிவருகின்றன. குறிப்பாக, தொழிற்சாலைகளில், சானிடைசர் பயன்படுத்துவதுடன், முகக்கவசங்கள் அணிந்து, தொழிலாளர்கள் பணிபுரிய வேண்டியுள்ளது. மருத்துவமனைகளில் என்றில்லாது, பொது இடங்களில், பொதுமக்கள், முகக்கவசம் அணிய வேண்டியதும் கட்டாயமாகியிருக்கிறது.தேவை அதிகரிக்கும்போதெல்லாம், விலை அதிகரிப்பு இயல்பாகிறது. ஆனால், கொள்ளை லாபத்தில் விற்க நினைப்பது பேராசை. முகக்கவசம், சானிடைசர் போன்றவற்றின் விலைகள், அபரிமிதமாக விற்கப்படுவதற்கு, இதுவே காரணம். அதிக விலைக்கு விற்பவர்கள் மீது, தற்போது, நடவடிக்கைகள் பாய்ந்து வருகின்றன.‘‘சானிடைசரை, ஆரம்பச் சுகாதார மையங்கள், நகர்ப்புறச் சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள் போன்ற இடங்களில், சுயமாகத் தயாரித்துக்கொள்ள முடியும். சானிடைசர் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள், முதலில் அதிக வெப்ப அழுத்தத்துடன் சுத்தப்படுத்தப்பட்ட வேண்டும்.
திருப்பூரில், இதன்படி சானிடைசர்கள் தயாரிக்கப்பட்டு, அரசு மருத்துவமனை, சுகாதார நிலையங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உலகச் சுகாதார அமைப்பு விதிமுறை, தமிழக சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ள வழிகாட்டல் படி இவை தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் தயாரிப்பை அதிகப்படுத்துவதன் மூலம், குறைந்த விலைக்குச் இவற்றைச் சந்தைப்படுத்த முடியும்’’ என்கின்றனர், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தினர்.திருப்பூர் மாவட்டத்தில், மகளிர் திட்டம் மூலம், முகக்கவசங்களை வாங்கி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, கலெக்டர் அலுவலகத்தில், இந்த விற்பனை துவங்கியது. ‘‘அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து வாங்கி, மாவட்டம் முழுவதும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். மாநகராட்சி அலுவலகங்கள், ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சி அலுவலகங்கள் என, மக்கள் எளிதில் வந்து வாங்கும் இடங்களில், விற்பனை மையம் அமைக்கப்படும். மகளிர் குழுவினர் மூலம், முகக்கவசம் விற்பனை பணி நடக்கும். முகக்கவசம் ஒன்று, 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எனவே, மாவட்ட மக்களும், கிராமப்புற மக்களும், மகளிர் குழுவினர் விற்கும், முகக்கவசங்களை வாங்கி பயன்படுத்தலாம்’’ என்று கூறுகின்றனர் மகளிர் திட்ட அலுவலர்கள்.‘கொரோனா’வால், திருப்பூரில் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு உபகரணங்களுடன் உற்பத்தியைத் தொடர்வதாக தொழில் அமைப்புகள் அறிவித்திருக்கின்றன.
ஆர்டர்கள் இன்றி பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் சில, தற்போது கிராக்கி நிலவும், முகக்கவசங்கள் உற்பத்தி செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இதற்கான தொழில்நுட்பம் வேறாக இருந்தாலும், ஆடை உற்பத்தி நிறுவனங்கள், இதை எளிதாகக் கையாளக்கூடிய விதத்தில்தான் இருக்கிறது.மத்திய அரசு, தொழில்நுட்ப ஜவுளி தயாரிப்புக்கு ஊக்குவிப்பு வழங்குகிறது. முகக்கவசத் தயாரிப்புகளை ‘பிராண்டட்’ நிறுவனமாக திருப்பூர் நிறுவனங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும் உருவாகியிருக்கின்றன.திருப்பூர் மாவட்டம் என்றில்லாது, மாநிலம் முழுவதும் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகள், சானிடைசர், முகக்கவசம் உள்ளிட்டவற்றை, தாங்களே தரத்துடன் தயாரிக்கத் துவங்கியிருக்கின்றன. இதன் மூலம், நியாயமான விலைக்கு மக்கள் இவற்றைப் பெற முடியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
எது சரியான முகக்கவசம்!‘‘சாதாரணத் துணியில் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இது கிருமித்தொற்று பாதுகாப்பு அளிப்பதாக இருக்காது. சுவாசம், வைரஸ், பாக்டீரியா வடிகட்டி அம்சங்களுடன் கூடிய, மூன்றடுக்குத் துணியில் தயாரிக்கப்படும் முகக் கவசங்களே, கிருமித் தொற்றில் இருந்து பாதுகாப்பு தரும். இவற்றுக்கு மூன்று வகை தரப் பரிசோதனைகளும் உள்ளன. ‘கொரோனா’ பரவலை தடுப்பதற்கு, தரப் பரிசோதனை செய்யப்பட்ட, கிருமி வடிகட்டும் தன்மையுள்ள, முகக்கவசங்களைப் பன்படுத்த வேண்டும்’’ என்கின்றனர், மருத்துவ வல்லுனர்கள்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|