ஊரடங்குக்கு கட்டுப்படாத காளை இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம் ஊரடங்குக்கு கட்டுப்படாத காளை இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம் ...  மந்த நிலை: தப்பிக்க வாய்ப்பில்லை மந்த நிலை: தப்பிக்க வாய்ப்பில்லை ...
வீடுகள் விற்பனையில் கடும் சரிவு: சென்னையில் 36 சதவீதம் குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2020
03:35

புதுடில்லி: நடப்பாண்டில், ஜனவரி முதல், மார்ச் வரையிலான காலகட்டத்தில், வீடுகள் விற்பனை, 42 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.

இது குறித்து, வீட்டு தரகு நிறுவனமான, ‘அனராக்’ அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:கடந்த ஜனவரி முதல், மார்ச் வரையிலான காலகட்டத்தில், வீடுகள் விற்பனை, 42 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. ஏழு முக்கியமான நகரங்களில், மொத்தம், 45 ஆயிரத்து, 200 வீடுகள் மட்டுமேவிற்பனை ஆகியுள்ளன.

புதிய வீடுகள்கொரோனா தொற்று குறித்த அச்சம் பரவியிருந்த நிலையில், தேவைகள் பெருமளவு குறைந்து போனதே இதற்கு காரணமாக அமைந்தது.கடந்த ஆண்டு இதே காலத்தில் மொத்தம், 78 ஆயிரத்து, 510 வீடுகள் விற்பனை ஆகியிருந்தன. டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், புனே ஆகிய ஏழு நகரங்களில், நேற்று முன்தினம் வரையிலான நிலை இது.மதிப்பீட்டு காலத்தை, கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது, 24 சதவீத குறைவாகும். உலகளவில் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த சரிவு ஆச்சரியமளிக்க வில்லை.மேலும், நாடு முடக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பதை அடுத்து, அடுத்த இரண்டு மாதங்களில் புதிய திட்டங்கள் அறிமுகம், புதிய வீடுகள் விற்பனை ஆகியவற்றில் கடுமையான சரிவு இருக்கும்.டில்லி மற்றும் தலைநகர் பிராந்திய பகுதிகளில், வீடுகள் விற்பனை, 41 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு, 13 ஆயிரத்து, 740 வீடுகள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், மதிப்பீட்டு காலத்தில், 8,150 வீடுகள்மட்டுமே விற்பனைஆகியுள்ளன.

வேறு வழியில்லை

மும்பை பெருநகர பகுதியில் விற்பனை, 42 சதவீதம் குறைந்துள்ளது. விற்பனை கடந்த ஆண்டில், 24 ஆயிரமாக இருந்த நிலையில், தற்போது, 13 ஆயிரத்து, 910 ஆககுறைந்துள்ளது.பெங்களூரில் இதுவே, 45 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டில், 15 ஆயிரத்து, 580 வீடுகள் என்ற நிலையிலிருந்து, 8,630 வீடுகளாக குறைந்துவிட்டது.

சென்னையை பொறுத்தவரை, 36 சதவீதம் அளவுக்கு சரிவு கண்டுள்ளது. கடந்த ஆண்டில், 3,430 வீடுகள் விற்பனை ஆகியிருந்த நிலையில், மதிப்பீட்டு காலத்தில், 2,190 வீடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.புனேவில், 42 சதவீதமும்; கோல்கட்டாவில், 39 சதவீதமும் சரிவுஏற்பட்டிருக்கின்றன.வைரஸ் தாக்கம் அதிகரிக்காமல் இருக்க, அரசு தீவிர முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக, விற்பனை குறையும். இருப்பினும், இந்த நிதர்சனத்தை ஏற்பதை தவிர வேறு வழி இல்லை.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)