பதிவு செய்த நாள்
27 மார்2020
03:35
புதுடில்லி: நடப்பாண்டில், ஜனவரி முதல், மார்ச் வரையிலான காலகட்டத்தில், வீடுகள் விற்பனை, 42 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.
இது குறித்து, வீட்டு தரகு நிறுவனமான, ‘அனராக்’ அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:கடந்த ஜனவரி முதல், மார்ச் வரையிலான காலகட்டத்தில், வீடுகள் விற்பனை, 42 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. ஏழு முக்கியமான நகரங்களில், மொத்தம், 45 ஆயிரத்து, 200 வீடுகள் மட்டுமேவிற்பனை ஆகியுள்ளன.
புதிய வீடுகள்கொரோனா தொற்று குறித்த அச்சம் பரவியிருந்த நிலையில், தேவைகள் பெருமளவு குறைந்து போனதே இதற்கு காரணமாக அமைந்தது.கடந்த ஆண்டு இதே காலத்தில் மொத்தம், 78 ஆயிரத்து, 510 வீடுகள் விற்பனை ஆகியிருந்தன. டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், புனே ஆகிய ஏழு நகரங்களில், நேற்று முன்தினம் வரையிலான நிலை இது.மதிப்பீட்டு காலத்தை, கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது, 24 சதவீத குறைவாகும். உலகளவில் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த சரிவு ஆச்சரியமளிக்க வில்லை.மேலும், நாடு முடக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பதை அடுத்து, அடுத்த இரண்டு மாதங்களில் புதிய திட்டங்கள் அறிமுகம், புதிய வீடுகள் விற்பனை ஆகியவற்றில் கடுமையான சரிவு இருக்கும்.டில்லி மற்றும் தலைநகர் பிராந்திய பகுதிகளில், வீடுகள் விற்பனை, 41 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு, 13 ஆயிரத்து, 740 வீடுகள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், மதிப்பீட்டு காலத்தில், 8,150 வீடுகள்மட்டுமே விற்பனைஆகியுள்ளன.
வேறு வழியில்லை
மும்பை பெருநகர பகுதியில் விற்பனை, 42 சதவீதம் குறைந்துள்ளது. விற்பனை கடந்த ஆண்டில், 24 ஆயிரமாக இருந்த நிலையில், தற்போது, 13 ஆயிரத்து, 910 ஆககுறைந்துள்ளது.பெங்களூரில் இதுவே, 45 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டில், 15 ஆயிரத்து, 580 வீடுகள் என்ற நிலையிலிருந்து, 8,630 வீடுகளாக குறைந்துவிட்டது.
சென்னையை பொறுத்தவரை, 36 சதவீதம் அளவுக்கு சரிவு கண்டுள்ளது. கடந்த ஆண்டில், 3,430 வீடுகள் விற்பனை ஆகியிருந்த நிலையில், மதிப்பீட்டு காலத்தில், 2,190 வீடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.புனேவில், 42 சதவீதமும்; கோல்கட்டாவில், 39 சதவீதமும் சரிவுஏற்பட்டிருக்கின்றன.வைரஸ் தாக்கம் அதிகரிக்காமல் இருக்க, அரசு தீவிர முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக, விற்பனை குறையும். இருப்பினும், இந்த நிதர்சனத்தை ஏற்பதை தவிர வேறு வழி இல்லை.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|