பதிவு செய்த நாள்
27 மார்2020
03:37
புதுடில்லி: கொரோனா தொற்று நோயால், இந்திய பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் என்றும், நாடு முடக்கப்பட்டதன் விளைவாக, தயாரிப்பு, எண்ணெய், நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகள் பாதிப்படையும் என்றும், ‘டன் அண்டு பிராட்ஸ்டிரீட்’ ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, இதன் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:உலக நாடுகள், மந்தநிலைக்குள் நுழைவதற்கான சாத்தியக்கூறுகளும், நிறுவனங்கள் திவாலாகும் வாய்ப்பும் அதிகம் உள்ளன. உலகளாவிய மந்தநிலையிலிருந்து, இந்தியா தனித்து நிற்க வாய்ப்பில்லை.உலகளாவிய உற்பத்தி மையங்கள், தொற்று நோய் அச்சத்தால் முடக்கப்படுவதால், உலக வினியோக தொடர் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது, உலகளாவிய வளர்ச்சியை பாதிக்கும்.இந்தியாவை பொறுத்தவரை, 21 நாட்கள் முடக்கப்பட்டிருக்கும் நிலையில், வளர்ச்சி, முந்தைய மதிப்பீடுகளிலிருந்து மிதமானதாகவே இருக்கும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 5 சதவீதமாக இருக்கும். அடுத்த நிதியாண்டில், வளர்ச்சி மிகவும் நிச்சயமற்றதாக இருக்கிறது. மார்ச் மாதத்தை பொறுத்தவரை, சில்லரை விலை பணவீக்கம், 6.5 – 5.7 சதவீதமாகவும், மொத்த விலை பணவீக்கம், 2.35 – 2.5 சதவீதமாகவும் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|