பதிவு செய்த நாள்
30 மார்2020
01:37
கடன்களுக்கான மாதத்தவணையை மூன்று மாதம் தள்ளி வைக்க வங்கிகளுக்கு அனுமதி அளித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு செயல்படும் விதம் தொடர்பான முக்கிய அம்சங்கள் வருமாறு:
அனைத்து வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள், அனைத்து நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் இந்த சலுகையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கலாம்.சலுகை காலத்தில், மாதத்தவணை செலுத்த வேண்டாம். எனினும் வட்டி பொருந்தும். அதாவது, நிலுவையில் உள்ள தொகையுடன் வட்டி சேர்த்து கணக்கிடப்படும். ஆனால், தவணை செலுத்த தவறியதற்கான அபராதம் விதிக்கப்படாது.
மாத்தவணை தள்ளி வைக்கப்பட்டதற்கு ஏற்ப, திரும்பி செலுத்தும் காலம் மாற்றி அமைக்கப் படும். ஆனால், இதனால் வாடிக்கையாளரின் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படாது. கடனுக்கான இடர் தன்மையும் பாதிக்கபடாது. கடனுக்கான விதிகள், நிபந்தனைகளில் எந்த மாற்றமும் இருக்காது.இந்த சலுகை, கொரோனா தாக்கத்தை எதிர்கொள்ள அளிக்கப்படுவதால், வாடிக்கையாளர்கள் ஒப்பந்தம் தொடர்பான சலுகையாக அல்லது மாற்றமாக கருதப்படாது.செயல் மூலதன கடன்களுக்கு, தள்ளி வைக்கப்படும் வட்டி, மூன்று மாத காலம் முடிந்த பிறகு வசூலிக்கப்படும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|