உலக பொருளாதாரம் மந்தநிலைக்கு சென்றுவிட்டது ; பன்னாட்டு நிதியம் அறிவிப்புஉலக பொருளாதாரம் மந்தநிலைக்கு சென்றுவிட்டது ; பன்னாட்டு நிதியம் அறிவிப்பு ...  வீட்டிலிருந்தே வரி வசூல் வீட்டிலிருந்தே வரி வசூல் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘கொரோனா’ நெருக்­கடி கற்­றுத்­த­ரும் முத­லீடு பாடங்­கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2020
01:47

உலகம் முழுவதும் பெரும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும், கொரோனா நெருக்கடி, முதலீடு தொடர்பான முக்கிய பாடங்களையும் நினைவுபடுத்துகிறது.

கொரோனா தாக்­கம், உல­கின் பெரும்­பா­லான நாடு­களை பாதித்து, பொரு­ளா­தா­ரத்தை முடக்­கி­யுள்­ளது. பொரு­ளா­தார முடக்­கம் கார­ண­மாக, பல துறை­களை சேர்ந்­த­வர்­கள் வேலை இழக்­கும் அபா­ய­மும் ஏற்­பட்­டுள்­ளது. குறிப்­பாக விமான சேவை உள்­ளிட்ட துறை மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளது.


ஒரு சில துறை­யில் இருப்­ப­வர்­க­ளுக்கு சம்­ப­ளம் தாம­த­மா­க­லாம் என, அஞ்­சப்­ப­டு­கிறது. இந்த
சூழ­லில், குடும்ப செலவை கையாள்­வது, முத­லீ­டு­களை நிர்­வ­கிப்­பது போன்­றவை சிக்­க­லா­க­லாம். இந்த நிலையை எதிர்­கொள்­வ­தற்­கான வழி­களை பார்க்­க­லாம்.

அவ­சர கால நிதி

தற்­போ­தைய சூழல் அனைத்து தரப்­பி­ன­ருக்­குமே சோத­னை­யா­னது என்­றா­லும், அவ­சர கால நிதியை உரு­வாக்கி வைத்­தி­ருப்­ப­வர்­கள் இந்த நெருக்­க­டியை எதிர்­கொள்ள அதி­கம் அஞ்ச வேண்­டி­ய­தில்லை. பொது­வா­கவே, நிதி திட்­ட­மி­ட­லில் முத­லில் வலி­யு­றுத்­தப்­படும்
விஷ­ய­மாக அவ­சர கால நிதி அமை­கிறது. மூன்று முதல் ஆறு மாத கால அத்­தி­யா­வ­சிய தேவைக்­கான தொகையை அவ­சரகால நிதி­யாக உரு­வாக்கி கொள்ள வேண்­டும்.

இத்­த­கைய நிதியை உரு­வாக்கி வைத்­தி­ருந்து, தேவை­யான முத­லீ­டு­களும் செய்­தி­ருந்­தால், எதிர்­பா­ரா­மல் ஏற்­படும் நிதி நெருக்­க­டியை எளி­தாக சமா­ளிக்­க­லாம். திடீர் செல­வு­க­ளால் முத­லீ­டு­களை தொடர முடி­யா­மல் போகும் அச்­ச­மும் இல்லை.பங்­குச்­சந்­தை­யில் பெரும் ஏற்ற இறக்­கம் ஏற்­பட்டு வந்­தா­லும், இவர்­கள் பதற்­றம் அடை­யா­மல் இருக்­க­லாம். முத­லீ­டு­க­ளின் அடிப்­படை அம்­சம் மற்­றும் நிதி இலக்­கு­க­ளுக்கு பொருந்­து­கின்­ற­னவா என்று பரி­சீ­லித்­தால் போது­மா­னது.


அதே நேரத்­தில், கையில் கூடு­தல் தொகை இருந்­தால், சரி­யும் சந்­தை­யில் எதிர்­கால மதிப்பு மிக்க பங்­கு­களை கண்­ட­றிந்து முத­லீடு செய்­யும் வாய்ப்­பை­யும் பரி­சீ­லிக்­க­லாம். அதிக இடர் விரும்­பாத முத­லீட்­டா­ளர்­கள் எனில், பாது­காப்பு அம்­சம் மிக்க இண்­டக்ஸ் நிதி­களை நாட­லாம்.

முத­லீ­டு­கள் நிலை

போது­மான முத­லீடு செய்­தி­ருந்து ஆனால், அவ­சர கால நிதி கைவ­சம் இல்­லா­த­வர்­கள், நிதி நெருக்­க­டியை உண­ர­லாம். இவர்­கள் முத­லில் அவ­சர கால நிதியை உரு­வாக்க முயற்­சிப்­பது நல்­லது. நிலை­மையை சமா­ளிக்க, வைப்பு நிதி அல்­லது டெப்ட் பண்ட் போன்ற முத­லீ­டு­களில் இருந்து ஒரு பகு­தியை விலக்கி, அவ­சர கால நிதியை ஏற்­ப­டுத்­திக் ­கொள்­ள­லாம்.

தங்க நகை கடன் வச­தி­யை­யும்,இதற்­காக பயன்­ப­டுத்­திக் ­கொள்­ள­லாம். ஒன்­றுக்கு மேற்­பட்ட வங்கி கணக்­கு­கள் இருந்­தால், கூடு­தல் கணக்­கு­களில் உள்ள பயன்­ப­டுத்­தப்­ப­டாத பணத்தை எடுத்துநிலை­மையை சமா­ளிக்­க­லாம்.பிரி­லான்­சர்­கள், ஆலோ­சனை பணி­களை வழங்­கும் நிலை­யான மாத வரு­மா­னம் இல்­லா­த­வர்­களுக்கு தற்­போ­தைய நெருக்­கடி கூடு­தல் சோத­னை­யா­கும்.


இவர்­கள், ஆறு மாத கால அத்­தி­யா­வ­சிய தேவைக்­கான தொகையை கையில் வைத்­தி­ருப்­பது அவ­சி­யம். இதற்­காக முத­லீட்­டின் ஒரு பகு­தியைவிலக்கி கொள்­ள­லாம். கடன் வச­தியை தவிர்த்து, செல­வு­களை குறைப்­ப­தும் அவ­சி­யம்.கடன்­க­ளுக்­கான மாதத்­த­வணை செலுத்தி வரு­ப­வர்­கள், இ.எம்.ஐ., செலுத்­து­வது பற்­றி­யும் கவ­லைப்­பட வேண்­டும்.


ரிசர்வ் வங்கி, இதற்கு மூன்று மாத நிவா­ர­ணம் அளித்­தி­ருப்­ப­தால் உட­ன­டி­யாக பிரச்னை இல்லை.கடன் தவ­ணையை செலுத்­தி­ய­படி, முத­லீ­டு­க­ளை­யும் தொடர்­வதே சிறந்­த­தாக இருக்­கும்.அவ­சர கால நிதி, இலக்­கு­க­ளுக்கு ஏற்ப முத­லீடு செய்­வது உள்­ளிட்­ட­வற்­றின்
முக்­கி­யத்­து­வத்தைதற்­போ­தைய நெருக்­கடி உணர்த்­து­கிறது. இந்த நெருக்­கடி கற்­றுத்­த­ரும் பாட­மா­க­வும் அமை­கிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)