பதிவு செய்த நாள்
30 மார்2020
01:47
உலகம் முழுவதும் பெரும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும், கொரோனா நெருக்கடி, முதலீடு தொடர்பான முக்கிய பாடங்களையும் நினைவுபடுத்துகிறது.
கொரோனா தாக்கம், உலகின் பெரும்பாலான நாடுகளை பாதித்து, பொருளாதாரத்தை முடக்கியுள்ளது. பொருளாதார முடக்கம் காரணமாக, பல துறைகளை சேர்ந்தவர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விமான சேவை உள்ளிட்ட துறை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில துறையில் இருப்பவர்களுக்கு சம்பளம் தாமதமாகலாம் என, அஞ்சப்படுகிறது. இந்த
சூழலில், குடும்ப செலவை கையாள்வது, முதலீடுகளை நிர்வகிப்பது போன்றவை சிக்கலாகலாம். இந்த நிலையை எதிர்கொள்வதற்கான வழிகளை பார்க்கலாம்.
அவசர கால நிதி
தற்போதைய சூழல் அனைத்து தரப்பினருக்குமே சோதனையானது என்றாலும், அவசர கால நிதியை உருவாக்கி வைத்திருப்பவர்கள் இந்த நெருக்கடியை எதிர்கொள்ள அதிகம் அஞ்ச வேண்டியதில்லை. பொதுவாகவே, நிதி திட்டமிடலில் முதலில் வலியுறுத்தப்படும்
விஷயமாக அவசர கால நிதி அமைகிறது. மூன்று முதல் ஆறு மாத கால அத்தியாவசிய தேவைக்கான தொகையை அவசரகால நிதியாக உருவாக்கி கொள்ள வேண்டும்.
இத்தகைய நிதியை உருவாக்கி வைத்திருந்து, தேவையான முதலீடுகளும் செய்திருந்தால், எதிர்பாராமல் ஏற்படும் நிதி நெருக்கடியை எளிதாக சமாளிக்கலாம். திடீர் செலவுகளால் முதலீடுகளை தொடர முடியாமல் போகும் அச்சமும் இல்லை.பங்குச்சந்தையில் பெரும் ஏற்ற இறக்கம் ஏற்பட்டு வந்தாலும், இவர்கள் பதற்றம் அடையாமல் இருக்கலாம். முதலீடுகளின் அடிப்படை அம்சம் மற்றும் நிதி இலக்குகளுக்கு பொருந்துகின்றனவா என்று பரிசீலித்தால் போதுமானது.
அதே நேரத்தில், கையில் கூடுதல் தொகை இருந்தால், சரியும் சந்தையில் எதிர்கால மதிப்பு மிக்க பங்குகளை கண்டறிந்து முதலீடு செய்யும் வாய்ப்பையும் பரிசீலிக்கலாம். அதிக இடர் விரும்பாத முதலீட்டாளர்கள் எனில், பாதுகாப்பு அம்சம் மிக்க இண்டக்ஸ் நிதிகளை நாடலாம்.
முதலீடுகள் நிலை
போதுமான முதலீடு செய்திருந்து ஆனால், அவசர கால நிதி கைவசம் இல்லாதவர்கள், நிதி நெருக்கடியை உணரலாம். இவர்கள் முதலில் அவசர கால நிதியை உருவாக்க முயற்சிப்பது நல்லது. நிலைமையை சமாளிக்க, வைப்பு நிதி அல்லது டெப்ட் பண்ட் போன்ற முதலீடுகளில் இருந்து ஒரு பகுதியை விலக்கி, அவசர கால நிதியை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
தங்க நகை கடன் வசதியையும்,இதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகள் இருந்தால், கூடுதல் கணக்குகளில் உள்ள பயன்படுத்தப்படாத பணத்தை எடுத்துநிலைமையை சமாளிக்கலாம்.பிரிலான்சர்கள், ஆலோசனை பணிகளை வழங்கும் நிலையான மாத வருமானம் இல்லாதவர்களுக்கு தற்போதைய நெருக்கடி கூடுதல் சோதனையாகும்.
இவர்கள், ஆறு மாத கால அத்தியாவசிய தேவைக்கான தொகையை கையில் வைத்திருப்பது அவசியம். இதற்காக முதலீட்டின் ஒரு பகுதியைவிலக்கி கொள்ளலாம். கடன் வசதியை தவிர்த்து, செலவுகளை குறைப்பதும் அவசியம்.கடன்களுக்கான மாதத்தவணை செலுத்தி வருபவர்கள், இ.எம்.ஐ., செலுத்துவது பற்றியும் கவலைப்பட வேண்டும்.
ரிசர்வ் வங்கி, இதற்கு மூன்று மாத நிவாரணம் அளித்திருப்பதால் உடனடியாக பிரச்னை இல்லை.கடன் தவணையை செலுத்தியபடி, முதலீடுகளையும் தொடர்வதே சிறந்ததாக இருக்கும்.அவசர கால நிதி, இலக்குகளுக்கு ஏற்ப முதலீடு செய்வது உள்ளிட்டவற்றின்
முக்கியத்துவத்தைதற்போதைய நெருக்கடி உணர்த்துகிறது. இந்த நெருக்கடி கற்றுத்தரும் பாடமாகவும் அமைகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|