அரசின்பங்கு விலக்கல் திட்டம் அரசின்பங்கு விலக்கல் திட்டம் ...  8 முக்கிய துறைகள் 11 மாதங்கள் காணாத வளர்ச்சி 8 முக்கிய துறைகள் 11 மாதங்கள் காணாத வளர்ச்சி ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மாருதியின் விற்பனை 47 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2020
23:27

புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான, மாருதி சுசூகியின் விற்பனை, கடந்த மார்ச் மாதத்தில், 47 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.

இது குறித்து, இந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது.கடந்த மார்ச் மாதத்தில், விற்பனை, 47 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. மொத்தம், 83 ஆயிரத்து 792 வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன.இதுவே, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், மொத்தம், 1.58 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியிருந்தன.

உள்நாட்டு விற்பனையை பொறுத்தவரை, மதிப்பீட்டு மாதத்தில், மொத்தம், 79 ஆயிரத்து, 80 வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன. இது 46.4 சதவீத சரிவாகும்.ஆல்ட்டோ உள்ளிட்ட சிறிய ரக கார்கள் விற்பனை, 5 சதவீதமும்,விட்டாரா பிரெஸ்ஸா உள்ளிட்ட பன்முக பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை, 53.4 சதவீதமும் சரிவைக் கண்டுள்ளன.

ஏற்றுமதியை பொறுத்தவரை, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், 10 ஆயிரத்து, 463 கார்கள் விற்பனை ஆகியிருந்த நிலையில், மதிப்பீட்டு மாதத்தில், 4,712 கார்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன. இது 55 சதவீத சரிவாகும். இது ஒருபுறமிருக்க, கடந்த நிதியாண்டிலும், இந்நிறுவனத்தின் விற்பனை, 16.1 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.

கடந்த நிதியாண்டில், இந்நிறுவனம் மொத்தம், 15.63 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே, இதற்கு முந்தைய நிதியாண்டான, 2018--_19ல் 18.62 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.உள்நாட்டு விற்பனையை பொறுத்தவரை, கடந்த நிதியாண்டில், மட்டும் மாருதி சுசூகி நிறுவனம் 16.7 சதவீத சரிவை சந்தித்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)