அரசின்பங்கு விலக்கல் திட்டம் அரசின்பங்கு விலக்கல் திட்டம் ...  8 முக்கிய துறைகள் 11 மாதங்கள் காணாத வளர்ச்சி 8 முக்கிய துறைகள் 11 மாதங்கள் காணாத வளர்ச்சி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
சிக்கலான நிலையிலும் அரங்கேறிய வங்கிகள் இணைப்பு நடவடிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2020
23:31

புதுடில்லி:கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முடக்கப்பட்டிருக்கும் நிலையிலும் வங்கிகள் இணைப்பு வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது.

ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைட்டட் பேங்க் ஆப் இந்தியா ஆகியவற்றின் அனைத்து கிளைகளும் பஞ்சாப் நேஷனல் பேங்கின் கிளைகளாக நேற்று முதல் செயல்படத் துவங்கிவிட்டன.பஞ்சாப் நேஷனல் பேங்க், ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைட்டட் பேங்க் ஆப் இந்தியா வங்கிகளும் இணைக்கப்பட்டு, பஞ்சாப் நேஷனல் பேங்க் எனும் பெயரில் நேற்று முதல் செயல்படத் துவங்கியுள்ளன.இந்த இணைப்பினால், பஞ்சாப் நேஷனல் பேங்க் நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய வங்கியாக உருவெடுத்துள்ளது.

இதனையடுத்து, இணைக்கப்பட்ட இரு வங்கிகளின் வாடிக்கையாளர்களும், இனி பஞ்சாப் நேஷனல் பேங்கின் வாடிக்கையாளர்களாகவே நடத்தப்படுவர். வாடிக்கையாளர்கள் சந்தேகங்களை நீக்க, அனைத்து கிளைகளிலும் தனியான வசதி செய்து தரப்பட்டுள்ளது.


இதேபோல், சிண்டிகேட் பேங்க், கனரா பேங்குடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆந்திரா பேங்க், கார்ப்பொரேஷன் பேங்க் ஆகியவை, யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடனும், அலகாபாத் பேங்க், இந்தியன் பேங்குடனும் இணைக்கப்பட்டுள்ளன.இருப்பினும், நாடு முடக்கத்தில் இருப்பதால், வங்கிகளின் பல்வேறு செயல்பாடுகளில் பெரிதாக எந்த மாற்றமும் செய்யப்படாமல், பழைய முறையே தொடர்கிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)