பதிவு செய்த நாள்
03 ஏப்2020
23:06
சென்னை:தமிழ்நாட்டில் உள்ள சிறு விவசாயிகள், கொரோனா வைரஸ் மூலம் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை சமாளிக்க, இலவச வாடகை டிராக்டர் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, டாபே நிறுவனம்.
இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான மல்லிகா ஸ்ரீனிவாசன் கூறியதாவது:கொரோனா வைரஸ் பிரச்னையால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை, தமிழகத்திலுள்ள சிறு விவசாயிகள் சமாளிக்க உதவும் வகையில், மாஸே பெர்குசன் மற்றும் ஐஷர் டிராக்டர்கள் வாடகைக்கு வழங்கப்படும். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. மேலும் வேளாண் கருவிகளும் இலவசமாக வாடகைக்கு வழங்கப்படும்.
இம்மாதத்திலிருந்து துவங்கி, அடுத்த மூன்று மாதங்களுக்கு, இந்த இலவச வாடகை டிராக்டர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள, 30 மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.இந்த திட்டத்தின் கீழ், 4,400க்கும் அதிகமான டிராக்டர்கள் மற்றும் 10 ஆயிரத்து, 500 வேளாண் கருவிகள் வழங்கப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|