பதிவு செய்த நாள்
03 ஏப்2020
23:30
புதுடில்லி:இந்திய ஸ்மார்ட்போன் தொழில், கொரோனா வைரஸ் தாக்கத்தால், 15 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்திக்கக்கூடும் என, ’கவுன்டர்பாயின்ட் ரிசர்ச்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துஉள்ளதாவது:வைரஸ் தாக்குதலால், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், ஸ்மார்ட்போன் விற்பனை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 15 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்திக்கக்கூடும். வைரஸ் தாக்குதலை முன்னிட்டு, நாடு முடக்கப்பட்டதால், ஸ்மார்ட்போன் வினியோகம், 3 சதவீதம் அளவுக்கு, நடப்பு ஆண்டில் பாதிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டில், 15.8 கோடி போன்கள் வினியோகம் செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பு ஆண்டில், 15.3 கோடி போன்களே வினியோகம் ஆகும் என, கணிக்கப்பட்டுள்ளது.நாடு மேலும் முடக்கப்படுமானால், இழப்பும் அதிகரிக்கும். நுகர்வோர்களும் மேலும் கொஞ்ச காலத்துக்கு, சேமிப்பில் அதிக ஆர்வம் செலுத்தி, போன்கள் வாங்குவதை குறைத்துக் கொள்ள கூடும். நிலைமை இந்த ஆண்டின் மத்தியில் சரியானாலும்கூட, பண்டிகை காலம் வரும் வரை, மக்கள் போன்கள் வாங்குவதை தவிர்க்கக்கூடும்.இவ்வாறு கூறப்பட்டுஉள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|