ஸ்மார்ட்போன் தொழிலில்  ரூ.15 ஆயிரம் கோடி இழப்பு ஸ்மார்ட்போன் தொழிலில் ரூ.15 ஆயிரம் கோடி இழப்பு ...  புதிய சிக்கலை எழுப்பும் கடை வாடகை பிரச்னைகள் புதிய சிக்கலை எழுப்பும் கடை வாடகை பிரச்னைகள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
இந்தியன் வங்கி இணைப்பு சர்வர் பிரச்னையால் சிக்கல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2020
23:46

சென்னை:கடந்த, 1ம் தேதி முதல், இந்தியன் வங்கியுடன், அலகாபாத் வங்கி இணைந்து விட்டது.இருப்பினும், கடந்த இரண்டு நாட்களாக, வங்கி, ‘சர்வர்’ பிரச்னை காரணமாக, சேவைகள் கிடைக்காமல், வாடிக்கையாளர்கள் அவதிக்கு உள்ளாயினர்.

இந்தியன் வங்கியுடன், அலகாபாத் வங்கி, கடந்த, 1ம் தேதி முதல் இணைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், 1ம் தேதி, புதிய நிதியாண்டு கணக்கு துவக்கம் என்பதால், அன்றைய தினம் வங்கியில் பரிவர்த்தனைகள் நடைபெறவில்லை.ஆனால், அடுத்த இரண்டு நாட்களாக, சேவைகள் வழங்குவதில் சிரமங்கள் ஏற்பட்டன. வங்கியின் சர்வர் பிரச்னையால், பரிவர்த்தனைகள் நடைபெறுவதில் சிக்கல்கள் எழுந்தன.


இது குறித்து, இந்தியன் வங்கி அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது:இந்தியன் வங்கியுடன், அலகாபாத் வங்கி அதிகாரப்பூர்வமாக இணைந்து விட்டது. ஆனால், தொழில் நுட்ப அளவில் இன்னும் முழுமையாக இணைக்கப்படவில்லை.சர்வர் பிரச்னைகள் ஏற்பட்டன. 2ம் தேதி மாலை, 3 மணிக்கு பிறகே, நிலைமை சரியானது. ஆனாலும், பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியவில்லை.நேற்றும், இணைப்பு துண்டிப்பு அடிக்கடி நிகழ்ந்ததால், முழுமையாக சேவைகளை வழங்க முடியவில்லை. விரைவில் நிலைமை சரி செய்யப்படும்.இவ்வாறு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

இதற்கிடையே, இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள், தங்களது கணக்கு இருப்பு விபரங்களை, மொபைல் போன் குறுந்தகவல்கள் மூலம் பெறுவதும் சிக்கலாக இருப்பதாக, புகார் தெரிவிக்கின்றனர்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)