பதிவு செய்த நாள்
03 ஏப்2020
23:46
சென்னை:கடந்த, 1ம் தேதி முதல், இந்தியன் வங்கியுடன், அலகாபாத் வங்கி இணைந்து விட்டது.இருப்பினும், கடந்த இரண்டு நாட்களாக, வங்கி, ‘சர்வர்’ பிரச்னை காரணமாக, சேவைகள் கிடைக்காமல், வாடிக்கையாளர்கள் அவதிக்கு உள்ளாயினர்.
இந்தியன் வங்கியுடன், அலகாபாத் வங்கி, கடந்த, 1ம் தேதி முதல் இணைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், 1ம் தேதி, புதிய நிதியாண்டு கணக்கு துவக்கம் என்பதால், அன்றைய தினம் வங்கியில் பரிவர்த்தனைகள் நடைபெறவில்லை.ஆனால், அடுத்த இரண்டு நாட்களாக, சேவைகள் வழங்குவதில் சிரமங்கள் ஏற்பட்டன. வங்கியின் சர்வர் பிரச்னையால், பரிவர்த்தனைகள் நடைபெறுவதில் சிக்கல்கள் எழுந்தன.
இது குறித்து, இந்தியன் வங்கி அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாவது:இந்தியன் வங்கியுடன், அலகாபாத் வங்கி அதிகாரப்பூர்வமாக இணைந்து விட்டது. ஆனால், தொழில் நுட்ப அளவில் இன்னும் முழுமையாக இணைக்கப்படவில்லை.சர்வர் பிரச்னைகள் ஏற்பட்டன. 2ம் தேதி மாலை, 3 மணிக்கு பிறகே, நிலைமை சரியானது. ஆனாலும், பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியவில்லை.நேற்றும், இணைப்பு துண்டிப்பு அடிக்கடி நிகழ்ந்ததால், முழுமையாக சேவைகளை வழங்க முடியவில்லை. விரைவில் நிலைமை சரி செய்யப்படும்.இவ்வாறு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
இதற்கிடையே, இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள், தங்களது கணக்கு இருப்பு விபரங்களை, மொபைல் போன் குறுந்தகவல்கள் மூலம் பெறுவதும் சிக்கலாக இருப்பதாக, புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|