பதிவு செய்த நாள்
06 ஏப்2020
00:43
கடன் தவணையை தள்ளி
வைக்கும் வசதியை பயன்படுத்திக்கொள்வதால் ஏற்படக்கூடிய கூடுதல் கடன் சுமையை
எதிர் கொள்ள, வாய்ப்புள்ள போது முன்கூட்டியே தொகையை செலுத்தும் வசதியை
பயன்படுத்திக்கொள்ளலாம்.
கொரோனா நெருக்கடி காரணமாக, கடன் தவணையை செலுத்த
மூன்று மாத சலுகை அளிக்கலாம் என, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி
தெரிவித்துள்ளது.சலுகை காலத்திற்கு வட்டி பொருந்தும் என்பதால்,
வாடிக்கையாளர்கள் இந்த கூடுதல் தொகையை செலுத்த வேண்டிஇருக்கும்.
வீட்டிக்கடனை பொருத்தவரை, மீதமுள்ள தவணைக்காலம் அதிகமாக இருந்தால், செலுத்த
வேண்டிய தொகையும் அதிகமாக இருக்கும்.
இதனால் கடன் சுமை
அதிகரிக்கும்.அதிலும், குறிப்பாக கிரெடிட் கார்டு, தனிநபர் கடன்களுக்கான
வட்டி விகிதம் அதிகம் என்பதால், இந்த வகை கடன்களுக்கான தவணையை தவறாமல்
செலுத்துவதே பொருத்தமாக இருக்கும்.எனவே, வாய்ப்பு இருப்பவர்கள் கடன் தவணையை
தொடர்ந்து செலுத்துவது ஏற்றதாக இருக்கும்.
எனினும், பணமுடை காரணமாக, இந்த
சலுகையை நாடுபவர்கள், கூடுதல் கடன் சுமையில் இருந்து தப்ப எளிய வழி
இருக்கிறது. வாய்ப்புள்ள போது, ஒரு தொகையை முன்கூட்டியே செலுத்தினால்,
அதற்கேற்ப கடன் சுமை குறையும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|