பதிவு செய்த நாள்
07 ஏப்2020
00:09
புதுடில்லி:கடந்த மார்ச் மாதத்தில், அன்னிய முதலீட்டாளர்கள், இதுவரை இல்லாத வகையில், 1.1 லட்சம் கோடி ரூபாயை இந்திய சந்தைகளிலில் இருந்து வெளியே எடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, உலகளவில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைந்ததை அடுத்து, இந்திய சந்தைகளிலிருந்து, இந்த அளவுக்கு பணத்தை வெளியே எடுத்துள்ளனர்.கடந்த மார்ச் மாதத்தில், அன்னிய முதலீட்டாளர்கள், பங்குச் சந்தைகளிலிருந்து, 61 ஆயிரத்து, 973 கோடி ரூபாயையும், பத்திரங்கள் சந்தையில் இருந்து, 56 ஆயிரத்து, 211 கோடி ரூபாயையும் எடுத்துள்ளனர்.
மொத்தத்தில், 1.18 லட்சம் கோடி ரூபாய் வெளியே எடுக்கப்பட்டுள்ளது.இதுவரை எடுக்கப் பட்டதில் இதுவே மிக அதிக அளவாகும்.ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற, முதல் இரண்டு வர்த்தக தினங்களில் மட்டும், உள்நாட்டு சந்தையிலிருந்து, 6,735 கோடி ரூபாயை, அன்னிய முதலீட்டாளர்கள் எடுத்துள்ளனர்.இதில், 3,802 கோடி ரூபாய், பங்குச் சந்தையிலிருந்தும், 2,933 கோடி ரூபாய் கடன் சந்தையிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|