பதிவு செய்த நாள்
07 ஏப்2020
00:15
புதுடில்லி:கடந்த மார்ச் மாதத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை குறைந்துள்ளது. ஆனால் இதற்கு மாறாக, சமையல் எரிவாயு விற்பனை அதிகரித்துஉள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில், நாட்டின் பெட்ரோல் விற்பனை, 17.6 சதவீதமும், டீசல் விற்பனை, 26 சதவீதமும் குறைந்து உள்ளது. நாடு முடக்கப்பட்டதன் காரணமாக, இந்த தேவை குறைவு ஏற்பட்டுள்ளது.மேலும், பல விமான சேவைகள் நிறுத்தப்பட்டதால், விமானங்களுக்கான எரிபொருள் விற்பனை, 31.6 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.
அளவின் அடிப்படையில் பார்த்தால், மார்ச் மாதத்தில், பெட்ரோல் விற்பனை, 19.43 லட்சம் டன் குறைந்துள்ளது. இதுவே, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், 22 லட்சம் டன் ஆக இருந்தது. டீசலை பொறுத்தவரை, கடந்த ஆண்டு மார்ச்சில், 63.4 லட்சம் டன் ஆக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு மார்ச்சில், 49.2 லட்சம் டன் ஆக குறைந்துவிட்டது. விமானங்களுக்கான எரிபொருள் விற்பனை, 4.63 லட்சம் டன் ஆக குறைந்துவிட்டது.
இதற்கு நேர்மாறாக, நாடு முடக்கப்பட்டதால், சமையல் எரிவாயு தேவை அதிகரித்துள்ளது. சமையல் எரிவாயு விற்பனை, மார்ச் மாதத்தில், 1.9 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், 21.85 லட்சம் டன் விற்பனை ஆன நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், 22.86 லட்சம் டன் ஆக அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டரை ஆண்டுகளில், இந்த மார்ச் மாதத்தில் தான் முதல் முறையாக, பெட்ரோல் விற்பனை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவை, நாட்டின் முக்கியமான மூன்று பொதுத் துறை நிறுவனங்களான, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றின் விற்பனை நிலவரமாகும். தனியார் நிறுவனங்களின் விற்பனையையும் உள்ளடக்கிய தகவல்கள், வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|