செல்வத்தை பறித்த கொரோனா அம்பானி, அதானிகளுக்கு இழப்பு செல்வத்தை பறித்த கொரோனா அம்பானி, அதானிகளுக்கு இழப்பு ...  வளர்ச்சி 2.6 சதவீதமாக இருக்கும் எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை தகவல் வளர்ச்சி 2.6 சதவீதமாக இருக்கும் எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை தகவல் ...
நாடு முடக்கப்பட்டதால், ‘காஸ்’ விற்பனை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஏப்
2020
00:15

புதுடில்லி:கடந்த மார்ச் மாதத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை குறைந்துள்ளது. ஆனால் இதற்கு மாறாக, சமையல் எரிவாயு விற்பனை அதிகரித்துஉள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில், நாட்டின் பெட்ரோல் விற்பனை, 17.6 சதவீதமும், டீசல் விற்பனை, 26 சதவீதமும் குறைந்து உள்ளது. நாடு முடக்கப்பட்டதன் காரணமாக, இந்த தேவை குறைவு ஏற்பட்டுள்ளது.மேலும், பல விமான சேவைகள் நிறுத்தப்பட்டதால், விமானங்களுக்கான எரிபொருள் விற்பனை, 31.6 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.


அளவின் அடிப்படையில் பார்த்தால், மார்ச் மாதத்தில், பெட்ரோல் விற்பனை, 19.43 லட்சம் டன் குறைந்துள்ளது. இதுவே, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், 22 லட்சம் டன் ஆக இருந்தது. டீசலை பொறுத்தவரை, கடந்த ஆண்டு மார்ச்சில், 63.4 லட்சம் டன் ஆக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு மார்ச்சில், 49.2 லட்சம் டன் ஆக குறைந்துவிட்டது. விமானங்களுக்கான எரிபொருள் விற்பனை, 4.63 லட்சம் டன் ஆக குறைந்துவிட்டது.

இதற்கு நேர்மாறாக, நாடு முடக்கப்பட்டதால், சமையல் எரிவாயு தேவை அதிகரித்துள்ளது. சமையல் எரிவாயு விற்பனை, மார்ச் மாதத்தில், 1.9 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், 21.85 லட்சம் டன் விற்பனை ஆன நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், 22.86 லட்சம் டன் ஆக அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டரை ஆண்டுகளில், இந்த மார்ச் மாதத்தில் தான் முதல் முறையாக, பெட்ரோல் விற்பனை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவை, நாட்டின் முக்கியமான மூன்று பொதுத் துறை நிறுவனங்களான, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றின் விற்பனை நிலவரமாகும். தனியார் நிறுவனங்களின் விற்பனையையும் உள்ளடக்கிய தகவல்கள், வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)