பதிவு செய்த நாள்
08 ஏப்2020
00:10
புதுடில்லி:கடந்த ஜனவரி முதல், மார்ச் வரையிலான காலத்தில், வீடுகள் விற்பனை, 29 சதவீதம் சரிந்துள்ளது என, ஜே.எல்.எல்., இந்தியா நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ஜனவரி முதல், மார்ச் வரையிலான காலகட்டத்தில், நாட்டில் உள்ள முக்கியமான, ஏழு நகரங்களில், வீடுகள் விற்பனை, 29 சதவீதம் குறைந்துஉள்ளது.இந்நகரங்களில் மொத்தம், 27 ஆயிரத்து, 451 வீடுகள் விற்பனை விற்பனை ஆகியுள்ளன.விற்பனை செய்யப்படாத வீடுகளின் மதிப்பு, 3.65 லட்சம் கோடி ரூபாயாகும்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் வாடிக்கையாளர்கள் வீடு வாங்கும் திட்டத்தை தள்ளி வைத்துள்ளனர்.கடந்த ஆண்டில், இதே காலத்தில், மொத்தம், 38 ஆயிரத்து, 628 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.கடந்த ஐந்து ஆண்டுகளில், இத்தகைய பெரிய சரிவு ஏற்படுவது இது இரண்டாவது முறையாகும். 2017 முதல் காலாண்டில், 37 சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்பட்டது. அதை அடுத்து, இப்போது தான் பெரியளவில் சரிவு ஏற்பட்டுஉள்ளது.
பெங்களூரில் அதிகபட்சமாக, 52 சதவீதம் வீழ்ச்சி காணப்பட்டுள்ளது. சென்னையில், 8 சதவீதம் அளவுக்கு விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது.கடந்த டிசம்பர் காலாண்டில் விற்பனை செய்யப்படாத வீடுகள் எண்ணிக்கை, 4.42 லட்சமாக இருந்த நிலையில், மார்ச் காலாண்டில், 4.55 லட்சமாக அதிகரித்துள்ளது.
வீடுகள் விற்பனைநகரம் விற்பனையான வீடுகள் சரிவு (சதவிகிதத்தில்)பெங்களூரு 4,186 52மும்பை 6,857 19சென்னை 2,453 8டெல்லி 5,941 18புனே 3,728 18கோல்கட்டா 1,259 35ஹைதராபாத் 3,027 41
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|