பதிவு செய்த நாள்
09 ஏப்2020
00:53
மும்பை:நேற்று, அதிகளவிலான ஏற்ற இறக்கங்களை சந்தித்த இந்திய பங்குச் சந்தைகள், இறுதியில் சரிவைக் கண்டன.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், வர்த்தகத்தின் இடையே, உச்சபட்ச நிலையில் இருந்து, 1,300 புள்ளிகள் சரிவைக் கண்டது. வர்த்தகத்தின் முடிவில், 173.25 புள்ளிகள் சரிந்து, 29,893.96 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, சென்செக்ஸ், 31,227.97 புள்ளிகளை தொட்டது. நேற்றைய தினம் சென்செக்ஸ், 0.58 சதவீதம் சரிவைக் கண்டது.
இதைப் போலவே, தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும், 43.35 புள்ளிகள் சரிந்து, 8,748.75 புள்ளிகளில் நிலை பெற்றது. இது, 0.49 சதவீத சரிவாகும். நேற்றைய வர்த்தகத்தில், டி.சி.எஸ்., நிறுவனம் அதிக இழப்பை சந்தித்தது. மாறாக, சன் பார்மா, என்.டி.பி.சி., இண்டஸ்இண்ட் பேங்க், பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவன பங்குகள், விலையேற்றத்தை சந்தித்தன.
கொரோனா வைரஸ் தாக்கத்தை முன்னிட்டு, அறிவிக்கப்பட்ட அரசின் தடை, 14ம் தேதிக்குப் பிறகு நீக்கப்படுமா என்பது குறித்து, வந்த பல்வேறு செய்திகள், நேற்றைய சந்தையின் ஏற்றத் தாழ்வுக்கு முக்கியமான காரணமான அமைந்தது.மேலும், கொரோனாவால், உலக பங்குச் சந்தைகளில், முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைந்திருந்ததும் காரணமாக அமைந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|