பதிவு செய்த நாள்
10 ஏப்2020
23:07
புதுடில்லி:கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு, மார்ச் மாதத்தில், பங்குச் சந்தைகள் சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில், மிக அதிக அளவிலான முதலீடுகள் வந்துள்ளன.இது குறித்து, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான, ‘ஆம்பி’ தெரிவித்துள்ளதாவது:
கடந்த மார்ச் மாதத்தில், பங்குச் சந்தைகள் சார்ந்த திட்டங்களில், 11 ஆயிரத்து, 485 கோடி ரூபாய் முதலீடுகள் வந்துள்ளன.சந்தையில் கடுமையான ஏற்ற, இறக்கங்கள் இருந்த போதும், கடந்த ஓராண்டில் இல்லாத வகையில், இத்திட்டங்களில் அதிக முதலீடுகள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம், ஒட்டுமொத்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில் இருந்து, 2.13 லட்சம் கோடி ரூபாய் வெளியேறி உள்ளது. இதுவே, கடந்த பிப்ரவரி மாதத்தில், 1,985 கோடி ரூபாய் மட்டுமே வெளியேறி இருந்தது.கடந்த மார்ச் மாதத்தில், 44 மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 22.26 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த பிப்ரவரி மாதத்தில், இது, 27.23 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
கடந்த மார்ச் மாதத்தில் பங்குச் சந்தைகள் சார்ந்த திட்டங்களில், 11 ஆயிரத்து, 723 கோடி ரூபாய் உள்ளே வந்து, 238 கோடி ரூபாய் வெளியேறி உள்ளது. இதையடுத்து, முதலீட்டு தொகை, 11 ஆயிரத்து, 485 கோடி ரூபாய். கடந்த ஆண்டு, மார்ச் மாதத்துக்கு பிறகு, இதுவே அதிகபட்ச வரவாகும். கடந்த ஆண்டு மார்ச்சில், முதலீடு செய்யப்பட்ட தொகை, 11ஆயிரத்து, 756 கோடி ரூபாய் ஆகும்.
இதற்கிடையே, தங்க இ.டி.எப்., திட்டத்தில், மார்ச் மாதத்தில், 195 கோடி ரூபாய் வெளியே எடுக்கப்பட்டுள்ளது.மாறாக, பிப்ரவரி மாதத்தில், 1,483 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு இருந்தது. இது, மிக அதிக அளவாகும்.இவ்வாறு, ஆம்பி தெரிவித்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|