காணொலியில் அவசரகால கூட்டம் நிறுவனங்களுக்கு அரசு அனுமதிகாணொலியில் அவசரகால கூட்டம் நிறுவனங்களுக்கு அரசு அனுமதி ...  கொரோனாவுக்கு எதிரான புதிய காப்பீடு திட்டங்கள் கொரோனாவுக்கு எதிரான புதிய காப்பீடு திட்டங்கள் ...
பெருத்த சரிவை காணும் பெட்ரோல், டீசல் தேவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2020
23:09

புதுடில்லி:நடப்பு ஏப்ரல் மாதத்தில், நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் தேவை, 66 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


விமான எரிபொருள், 90 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில், நாடு முடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நாட்டின் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் தேவையில் மிகப்பெரும் அளவு சரிவு ஏற்பட்டுள்ளது.மேலும், பெரும்பாலான விமான சேவைகள் நிறுத்தப்பட்டு, தரை இறக்கப்பட்டதால், அவற்றுக்கான எரிபொருள் தேவையும் சரிந்துள்ளது.

இந்தியாவில், கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதத்தில், 24 லட்சம் டன் பெட்ரோல் பயன்படுத்தப்பட்டு உள்ளது. டீசலை பொறுத்தவரை, 73 லட்சம் டன் டீசல் பயன்படுத்தப்பட்டுள்ளது. விமானங்களுக்கான எரிபொருள், 6.45 லட்சம் டன் பயன்படுத்தப்பட்டுள்ளது.கடந்த மார்ச் மாதத்தில், 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், எரிபொருள் தேவை குறைந்து போனது. அதன் தொடர்ச்சியாக,ஏப்ரல் மாதத்திலும் எரிபொருள் தேவை சரிந்துள்ளது.


கடந்த மார்ச் மாதத்தில், நாட்டின் எரிபொருள் தேவை, 24.23 சதவீதம் குறைந்து, 56.5 லட்சம் டன் ஆக சரிந்தது. இந்த மிகப்பெரிய சரிவுக்கு காரணம், சரக்கு வாகனங்கள் மற்றும் ரயில்கள், தங்கள் போக்குவரத்தை நிறுத்தியது தான்.கடந்த மார்ச் மாதத்தில், பெட்ரோல் விற்பனை, 16.37 சதவீதம் குறைந்து விட்டது.


நாடு முடக்கப்பட்டதால், கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் போக்குவரத்து குறைந்து, தேவையும் சரிந்தது.மாறாக, சமையல் எரிவாயு தேவை மட்டுமே, மார்ச் மாதத்தில், 1.9 சதவீதம் அதிகரித்துள்ளது.நடப்பு ஏப்ரலில், சமையல் எரிவாயு தேவை, 30 சதவீதம் அதிகரிக்கும் என தோராயமாக தற்போது கணிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)