பதிவு செய்த நாள்
10 ஏப்2020
23:10
புதுடில்லி:ஐ.சி.ஐ.சி.ஐ., லொம்பார்டு, கோ டிஜிட், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, கொரோனா வைரசுக்கு எதிரான காப்பீடு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன.
இந்த திட்டங்களில், மருத்துவமனை செலவு, தீவிர சிகிச்சை பிரிவு அறைக்கான வாடகை, ஆம்புலன்ஸ் உதவி, டெலி கன்சல்டேஷன் போன்றவை இணைக்கப்பட்டுள்ளன.மேலும், காப்பீட்டை டிஜிட்டல் முறையில் கோரலாம். அதுமட்டுமின்றி; பாலிசி எடுப்பதற்கு முன், மருத்துவ பரிசோதனைகள் தேவையில்லை.கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிரான, இரண்டு பாலிசிகளை, இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளன.
இந்திய மக்கள் தொகையில், கிட்டத்தட்ட, 56 சதவீதம் பேர் எந்தவிதமான மருத்துவ காப்பீடு திட்டங்களையும் எடுத்துக்கொள்ளவில்லை என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், தற்போதைய நிலையை மனதில் கொண்டு, இந்த மருத்துவ திட்டங் களை அறிமுகம் செய்திருப்பதாக, இந்நிறுவனங்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளன.வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்படும் பட்சத்தில், உடனடியாக காப்பீடு எடுத்தவர்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்த பாலிசிக்கான ஆண்டு பிரீமியம், 159 ரூபாய்.
மேலும், 'டிஜிட் இல்னஸ் குரூப் இன்சூரன்ஸ்' திட்டத்தின் மூலம், ஆண்டு பிரீமியம், 511 ரூபாய் செலுத்தி, 1 லட்சம் ரூபாய்க்கான காப்பீட்டை பெறலாம்.இந்த பாலிசியில், அறை வாடகை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றிற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன், 30 நாட்களுக்கும்; அனுமதிக்கப்பட்ட பின், 60 நாட்களுக்குமான கட்டணங்களை, இந்த திட்டம், கவர் செய்கிறது.இவை, பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|