கொரோனாவுக்கு எதிரான புதிய காப்பீடு திட்டங்கள் கொரோனாவுக்கு எதிரான புதிய காப்பீடு திட்டங்கள் ...  வீட்டிலிருந்து பணி: 99.8 சதவீதத்தினரால் இயலவில்லை வீட்டிலிருந்து பணி: 99.8 சதவீதத்தினரால் இயலவில்லை ...
முதல் காலாண்டில் நிறுவனங்கள் வருவாய் இழப்பை சந்திக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2020
23:12

புதுடில்லி:நுகர்பொருள் துறையைச் சேர்ந்த, ‘கோத்ரேஜ் கன்ஸ்யூமர்’ மற்றும் ‘மேரிகோ’ நிறுவனங்கள், கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக, தங்களுடைய முதல் காலாண்டு வருவாய் பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, உள்நாட்டிலும், உலக அளவிலும் வணிகம் பாதிக்கப்பட்டு இருப்பதால், நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், வருவாய் பாதிப்புக்கு உள்ளாகும் என, இந்த இரு முன்னணி நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.எதிர்பாராத சூழலில், விற்பனை பாதிக்கப்பட்டு இருப்பதால், அதை சரிசெய்யும் வகையில், தீவிரமான நிதி மேலாண்மை நடவடிக்கைகளில் இறங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளன.

மேலும், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வணிகம் குறைந்துள்ளதால், கடந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் கிடைத்த வருவாயை விட, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் குறைவாகவே வருவாய் இருக்கும் என, மேரிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.மார்ச் மாத இறுதியில் இருந்து, விற்பனை, கிட்டத்தட்ட இல்லை என்று சொல்லத்தக்க வகையில் மாறிவிட்டதால், இதன் பாதிப்பு, முதல் காலாண்டில் நிச்சயம் இருக்குமென, கோத்ரேஜ் கன்ஸ்யூமர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனம், விற்பனையில் இரட்டை இலக்க சரிவை சந்தித்து உள்ளதாக அறிவித்து உள்ளது.கடந்த மார்ச் மாதத்தின், கடைசி, 12 நாட்களில், தேவைகள் நிலையாக இருந்த போதிலும், வினியோகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. அதேசமயம், சோப்பு உள்ளிட்ட பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது என கோத்ரேஜ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.


வினியோக நிலைமை படிப்படியாக சரியாகும் போது, மீண்டும் விற்பனை அதிகரிக்கும் என்றும், குறிப்பாக, தனிநபர் ஆரோக்கிய பொருட்கள் மற்றும் வீடுகளுக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றின் விற்பனை அதிகரிக்கும் என்றும், கோத்ரேஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)