முதல் காலாண்டில் நிறுவனங்கள் வருவாய் இழப்பை சந்திக்கும் முதல் காலாண்டில் நிறுவனங்கள் வருவாய் இழப்பை சந்திக்கும் ...  வீட்டிலிருந்து பணி: 99.8 சதவீதத்தினரால் இயலவில்லை வீட்டிலிருந்து பணி: 99.8 சதவீதத்தினரால் இயலவில்லை ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
நடப்பாண்டில் தங்கத்தின் தேவை 30 சதவீதம் குறையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2020
23:15

மும்பை:தங்கம் மற்றும் ஆபரணங்களுக்கான தேவை, நடப்பு ஆண்டில், 30 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடையும் என, இந்திய வர்த்தக சபை தெரிவித்துள்ளது.

நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 7 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது.நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றுக்கான தேவை, நடப்பு ஆண்டில், 30 சதவீதம் குறையும் என, இந்திய வர்த்தக சபை தெரிவித்துள்ளது.இது குறித்து, மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நம் நாட்டில், திருமணங்களை முன்னிட்டே நகை விற்பனை அதிக அளவில் நடைபெறும்.


இந்நிலையில், தற்போது பல திருமண நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக, திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதும் தடைபட்டு உள்ளது.நடப்பாண்டில் தங்கத்தின் தேவை, 700 – 800 டன் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு முன்பாகவே, கடுமையான விலை ஏற்ற, இறக்கங்கள், தேவையை அதிகம் பாதித்துள்ளனர்.

நாட்டின் சமூக, பொருளாதாரத்திற்கும், தங்கத்துக்கும் இடையே, வலுவான தொடர்பு இருப்பதால், இந்தியாவின் சராசரி நீண்டகால தங்கத்தின் தேவை, 850 டன் ஆக கணிக்கப்பட்டுள்ளது.தற்போது, வைரஸ் தொற்று பாதிப்பால், தங்கத்தின் கொள்முதல், கடந்த ஆண்டில் செய்யப்பட்ட, 690 டன்னிலிருந்து, 30 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆபரணத் துறையில், 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர். இவர்களது பொருளாதார நிலை, தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக, தினக்கூலி பணியாளர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.மேலும், முன்கூட்டியே செலுத்தப்படும் வரி, தங்க கடனுக்கான வட்டி போன்ற பல்வேறு விஷயங்களும், இத்துறையை தற்போது மிகவும் பாதித்து உள்ளது.எனவே, முன்கூட்டியே செலுத்தப்படும் வரிக்கு 150 நாட்கள் அரசு சலுகை தர வேண்டும். மேலும், தங்கக் கடன் வட்டி குறைக்கப்பட வேண்டும்.

மத்திய அரசு, குறுகிய காலத்திற்கு, ஒரு சிறப்பு நிதியை உருவாக்கி, வேலையில்லாமல் இருக்கும் கைவினைஞர்கள் உள்ளிட்டோருக்கு, ஒரு முறை நிதி உதவி வழங்க வேண்டும்.இவ்வாறு, இந்திய வர்த்தக சபை தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)