முதல் காலாண்டில் நிறுவனங்கள் வருவாய் இழப்பை சந்திக்கும் முதல் காலாண்டில் நிறுவனங்கள் வருவாய் இழப்பை சந்திக்கும் ...  விரைவில் எழுச்சி பெறும் துறைகள் தடை நீக்கத்துக்குப் பின், எவை எவை வளர்ச்சி காணும்? விரைவில் எழுச்சி பெறும் துறைகள் தடை நீக்கத்துக்குப் பின், எவை எவை ... ...
வீட்டிலிருந்து பணி: 99.8 சதவீதத்தினரால் இயலவில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2020
22:50

மும்பை:கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள், வீட்டிலிருந்தே பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், வீட்டிலிருந்து பணிபுரிபவர்களில், 0.2 சதவீதம் பேர் மட்டுமே, உற்பத்தித் திறன் கொண்டவர்களாக இருக்கின்றனர். மீதமுள்ள, 99.8 சதவீத ஊழியர்கள், வீட்டிலிருந்து பணிபுரிய திறனற்றவர்களாக இருப்பதாக, ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இந்த ஆய்வில், 10 ஆயிரம் பேரை உட்படுத்தியுள்ளனர்.

திறனுக்கு ஏற்ற பணி

இது குறித்து ய்வு செய்த, ‘மைண்ட் மேட்ச்’ நிறுவனம், மேலும் தெரிவித்துள்ளதாவது:கற்றல், ஆராய்தல், நடைமுறை தொடர்பு திறன், திட்டமிடல், செயல்படுத்துதல் என, ஏதாவது ஒன்றில் இவர்கள் பின்தங்கியுள்ளனர்.ஊழியர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமான திறனை கொண்டுள்ளனர். இதை, நிறுவனங்கள் கணக்கில் கொண்டு, அவர்களின் திறனுக்கு ஏற்ற பணிகளை வழங்க வேண்டும்.

உதாரணமாக, இந்த ஆய்வில், 16.97 சதவீதம் ஊழியர்கள், சவால்களை சந்திக்கும் திறன் படைத்தவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கு சவாலான வேலைகளை வழங்கலாம். மேலும், 17 சதவீதம் பேர், என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாகச் சொன்னால், அதன் படி சொன்னதை செய்து விடுவர்.சவாலான வேலைகளை செய்பவர்களிடம் குறைவாக தொடர்பு கொண்டால் போதுமானது.ஆனால், என்ன செய்ய வேண்டும் என்பதை சொன்னால், செய்யக்கூடிய ஒருவருக்கு தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்து, வேலைகளை வாங்க வேண்டியதிருக்கும்.


அச்சம்

ஆய்வில் பங்கேற்ற, 12.7 சதவீதம் பேர், பணிக்கு அஞ்சவில்லை என்றாலும், அவர்களுடன் யாரும் தொடர்பு கொள்ளாமல் இருப்பது குறித்து அஞ்சுகின்றனர். இவர்களுடன், காணொலி மூலமாக அடிக்கடி தொடர்பு கொண்டால், அவர்கள் வேலைத் திறன் அதிகரிக்கும்.இவ்வாறு, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)