பதிவு செய்த நாள்
11 ஏப்2020
22:53
மும்பை:மார்ச் மாதத்துடன் முடிவடைந்த கடந்த நிதியாண்டில், வங்கிகளின் கடன் வளர்ச்சி, 50 ஆண்டுகளில் இல்லாத வகையில், 6.14 சதவீதமாக குறைந்துவிட்டது என, ரிசர்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி குறைந்த நிலையில், வங்கிகளின் கடன் வளர்ச்சி, 6.14 சதவீதமாக குறைந்துவிட்டது. இது, 1962ம் ஆண்டுக்கு பிறகான குறைவான வளர்ச்சியாகும். அந்த சமயத்தில் வளர்ச்சி, 5.38 சதவீதமாக இருந்தது.கடந்த மார்ச், 27-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், வங்கிகள் கொடுத்த கடன், 103.71 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இதற்கு முந்தைய நிதியாண்டில் இது, 97.71 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.கடந்த நிதியாண்டில், தேவைகள் குறைவு காரணமாக, பொருளாதாரம் மிகவும் பலவீனமாக இருந்தது. மேலும், வாராக் கடன் உள்ளிட்ட பிரச்னைகளால், வங்கிகள் கடன் வழங்குவதற்கான, ‘ரிஸ்க்’ எடுப்பதில் அதிக தயக்கம் காட்டின.கடந்த நிதியாண்டில், வங்கிகளில், ‘டெபாசிட்’ செய்வது, 7.93 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|