வீட்டிலிருந்து பணி: 99.8 சதவீதத்தினரால் இயலவில்லை வீட்டிலிருந்து பணி: 99.8 சதவீதத்தினரால் இயலவில்லை ...  ரூ.29 கோடி தாமதக் கட்டணம் தள்ளுபடி ரூ.29 கோடி தாமதக் கட்டணம் தள்ளுபடி ...
விரைவில் எழுச்சி பெறும் துறைகள் தடை நீக்கத்துக்குப் பின், எவை எவை வளர்ச்சி காணும்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2020
22:56

பெங்களூரு:தற்போது, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நாட்டில் விதிக்கப்பட்டு இருக்கும் தடைகள் திரும்பப் பெறப்பட்ட பின், எந்தெந்த துறைகள் எழுச்சி பெறும் என, நிபுணர்கள் சிலர், தங்கள் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.

தடை நீக்கத்திற்குப் பின், மக்களின் மனநிலையைப் பொறுத்தே, துறைகள் மீண்டும் வளர்ச்சிக்கு திரும்பும். அதேசமயம், சில துறைகள், தடை நீக்கத்திற்குப் பின், வேகமாக மீண்டு, குறிப்பாக, மருந்து துறை, மருத்துவ மற்றும் சுகாதார உபகரணங்கள் துறை, ‘டிஜிட்டல்’ துறை ஆகியவை, வைரஸ் பாதிப்பின் பின்னணியில் உயர்வை காணும் என, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பழைய நிலை திரும்பும்

இது குறித்து, தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை முன்னாள் செயலர், ஆர்.சந்திரசேகர் கூறியதாவது:டிஜிட்டல் உலகத்துடன் இணைந்திருக்கும் நிறுவனங்கள், டிஜிட்டல் பொழுதுபோக்கு, சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் சிறப்பாகச் செயல்படும். கூடவே, அத்தியாவசியப் பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும் என்பதால், அவை சம்பந்தப்பட்ட துறைகளும், பழைய நிலைக்கு விரைவில் திரும்பும். மக்கள் ரிஸ்க் எடுக்க விரும்ப மாட்டார்கள்.


மனித மனோபாவம் காரணமாக பாதிக்கப்பட்ட துறைகள், வளர்ச்சி காண நாட்கள் பிடிக்கும். அதேசமயம், அரசு உத்தரவால், தற்போது தடையில் இருக்கும் துறைகள், விரைவாக வளர்ச்சி காணும்.இவ்வாறு அவர் கூறினார்.அரசு துறை சார்ந்த அதிகாரிகள் சிலர் கூறும்போது, போக்குவரத்து, கிடங்கு ஆகியவை உடனடியாக பழைய நிலைக்கு திரும்பும் என்றனர்.அதேசமயம், சில துறைகள், மக்களின் மனநிலையைப் பொறுத்தே, மீண்டும் பழைய நிலைக்கு வரும் என்றும் தெரிவித்தனர்.


வலைதள வர்த்தகம்

குறிப்பாக, பயணம் மேற்கொள்வது, ஓட்டலில் தங்குவது, வெளிநாடு செல்வது, ‘மால்’களில் பொருட்களை வாங்கச் செல்வது என பலவற்றை சொல்லலாம் என, தெரிவித்தனர்.பெரு நிறுவன அதிகாரி, ஒருவர் கூறும்போது, வலைதள வர்த்தகம், வீட்டு வினியோகம் ஆகிய இரண்டும், மேலும் வளர்ச்சி பெறும். சுற்றுலாவை பொறுத்தவரை, வளர்ச்சி காண்பதற்கு நீண்ட நாட்கள் ஆகும். மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பர்.


இதற்கு முன், அறையில் யார் யார் தங்கி இருந்தனர் என்பதை அறிய முடியாத நிலையில், ஓட்டல் அறையில் தங்க தயங்குவர். எனவே, இவை சார்ந்த துறைகள் எழுச்சி பெற காலதாமதமாகும் என, தெரிவித்தார்.மொத்தத்தில், நிலைமை சரியானாலும் கூட, பல துறைகளின் வளர்ச்சி, மக்களின் மனோபாவம் சார்ந்தே இருக்கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)