பதிவு செய்த நாள்
12 ஏப்2020
23:18
கொரோனா பாதிப்பு, ரியல் எஸ்டேட் துறையில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றி வீடு வாங்குபவர்கள் அறிந்திருப்பது அவசியம்.
பொருளாதாரத்தின் எல்லா துறைகளையும் கொரோனா வைரஸ் பாதித்திருக்கிறது.
குறிப்பிட்ட சில துறைகளில் இதன் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. தாக்கத்தின் அளவும், அதிலிருந்து மீண்டு வரும் வேகமும், ‘லாக்டவுன்’ காலத்தை சார்ந்திருக்கிறது. இந்நிலையில், ரியல் எஸ்டேட் துறையை பொறுத்தவரை, ஏற்கனவே பல்வேறு காரணங்களால் தேக்கம் நிலவும் சூழலில், கொரோனா தாக்கம் இரட்டிப்பு பாதிப்பாக அமைந்துள்ளது. இதன்
காரணமாக, ரியல் எஸ்டேட் துறையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை பார்க்கலாம்.
பணிகள் தாமதம்
ரியல் எஸ்டேட் பணிகள் மீண்டும் துவங்க தாமதமாகும் சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக, ஏற்கனவே கட்டப்பட்டு வரும் குடியிருப்பு திட்டங்களில் வீடுகள் முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்படுவது தாமதமாகும்.எனவே, புதிய வீட்டிற்காக காத்திருப்பவர்கள், இன்னும் சற்று காலம், மாத வாடகை மற்றும் வீட்டுக்கடனுக்கான மாதத்தவணை இரண்டையும் செலுத்த வேண்டியிருக்கும்.இதற்கு தயார் செய்து கொள்வது நல்லது. குடியிருப்பு திட்டங்கள் ஆறு முதல், எட்டு மாதம் வரை தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. லாக்டவுன் தளர்த்தப்பட்டாலும், உடன் குடியிருப்பு பணிகளை துவங்குவது சாத்தியம் இல்லை.
ஏனெனில், பெரும்பாலான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்ட நிலையில், அவர்கள் திரும்பி வந்து பணிகளை துவக்க வேண்டும். கொரோனா அச்சம் காரணமாக, தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் தங்கள் சொந்த ஊரிலேயே அதிக காலம் தங்க வாய்ப்பு இருக்கிறது. இது தொழிலாளர் பற்றாக்குறையை ஏற்படுத்தலாம்.ரியல் எஸ்டேட் பணிகள் தாமதமாகும் வாய்ப்பிருக்கும் நிலையில், விற்பனையில் தேக்கம் ஏற்படலாம் என்றும்
அஞ்சப்படுகிறது.
பொதுவாக, தற்போதுள்ளது போன்றநிச்சயமற்ற சூழலில் பலரும், பெரிய அளவிலான
வாங்கும் முடிவுகளை தள்ளி வைப்பதுண்டு.எனவே, புதிய வீடு வாங்கும் முடிவையும் பலர் தள்ளி வைக்கலாம். இது விற்பனையில்தாக்கம் செலுத்தும். ஏற்கனவே முதல் காலாண்டில் விற்பனை தேக்கம் அடைந்துள்ளதாக தெரிகிறது.
விலை போக்கு
வீடுகள் விற்பனையில் சுணக்கம் காணப்பட்டாலும், விலையில் பெரிய அளவில் மாற்றம்ஏற்பட வாய்ப்பில்லை என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். தற்போதுள்ள விலை நிலவரமே தொடரும் என்கின்றனர்.எனினும், கட்டுமானப்பணிகள் துவங்கும் போது, ஒரு சில
நிறுவனங்கள் கைவசம் உள்ள வீடுகளை விற்பனை செய்ய, தள்ளுபடி வழங்க வாய்ப்புஇருப்பதாக கருதப்படுகிறது.
அதே நேரத்தில், கட்டுமானப்பொருட்களின் விலை உயர்வையும் நிறுவனங்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்கின்றனர். ஆனால், இந்த விலை உயர்வை வாடிக்கையாளர்களுக்கு மாற்றித்தருவதும் சாத்தியம் இல்லை.எதிர்வரும் மாதங்கள் ரியல் எஸ்டேட் துறைக்கு சவாலாக அமையும் என்றாலும், கொரோனா பாதிப்புக்கு பின், சர்வதேச அளவில் வர்த்தகம் எழுச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீட்சிக்குப்பின் இந்திய ரியல் எஸ்டேட் துறையும் வளர்ச்சி காணும் என கருதப்படுகிறது. சொந்த வீடு வாங்க திட்டமிட்டிருப்பவர்களை பொறுத்தவரை மாறியிருக்கும் சூழலில், தங்கள் பட்ஜெட்டை மறு பரீசிலனை செய்வது அவசியம்.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|