பதிவு செய்த நாள்
14 ஏப்2020
23:32
புதுடில்லி:நடப்பு நிதியாண்டுக்கான, தங்க சேமிப்பு பத்திரங்களை, மத்திய அரசு, ஆறு கட்டங்களாக வெளியிட இருப்பதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது குறித்து, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளதாவது:நடப்பு நிதியாண்டுக்கான தங்க சேமிப்பு பத்திரங்களை, மத்திய அரசு, ஆறு கட்டங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த பத்திர வெளியீடுகள், நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கி, செப்டம்பர் மாதம் வரை ஆறு கட்டங்களாக நடைபெற இருக்கிறது.
முதல் கட்ட தங்க சேமிப்பு பத்திர வெளியீடு இம்மாதத்தில் இருக்கும். இவ்வாறு, தெரிவித்து உள்ளது.மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக, 2015, நவம்பரில், தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை அறிவித்தது. இதில், தங்கத்தை, ஆவண வடிவில் சேமிக்கலாம். 1 கிராம் தங்கம், 1 யூனிட் என்ற கணக்கில் வழங்கப்படும்.
வலைதளம் அல்லது மின்னணு முறையில் மேற்கொள்ளும் முதலீடு களுக்கு, 1 கிராமுக்கு, 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.இதனால், 'கிரெடிட், டெபிட்' கார்டு உள்ளிட்ட மின்னணு பணப் பரிவர்த்தனையில், தங்க சேமிப்பு பத்திரங்களை வாங்குவோருக்கு, ஒரு கிராம், 50 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.
வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், தலைமை அஞ்சலகங்கள் ஆகியவற்றில், தங்க சேமிப்பு பத்திரங்கள் விற்பனை செய்யப் படும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|