கொரோனா பாதிப்பும் – ஜி.எஸ்.டி., சலுகைகளும்! கொரோனா பாதிப்பும் – ஜி.எஸ்.டி., சலுகைகளும்! ...  தடை நீட்டிப்பை வரவேற்கும் நிறுவனங்கள்கூடுதலாக சலுகைகளும் தேவை என கோரிக்கை தடை நீட்டிப்பை வரவேற்கும் நிறுவனங்கள்கூடுதலாக சலுகைகளும் தேவை என ... ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
தங்க சேமிப்பு பத்திரங்கள் ஏப்ரலில் வெளியீடு துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஏப்
2020
23:32

புதுடில்லி:நடப்பு நிதியாண்டுக்கான, தங்க சேமிப்பு பத்திரங்களை, மத்திய அரசு, ஆறு கட்டங்களாக வெளியிட இருப்பதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளதாவது:நடப்பு நிதியாண்டுக்கான தங்க சேமிப்பு பத்திரங்களை, மத்திய அரசு, ஆறு கட்டங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த பத்திர வெளியீடுகள், நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கி, செப்டம்பர் மாதம் வரை ஆறு கட்டங்களாக நடைபெற இருக்கிறது.

முதல் கட்ட தங்க சேமிப்பு பத்திர வெளியீடு இம்மாதத்தில் இருக்கும். இவ்வாறு, தெரிவித்து உள்ளது.மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக, 2015, நவம்பரில், தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை அறிவித்தது. இதில், தங்கத்தை, ஆவண வடிவில் சேமிக்கலாம். 1 கிராம் தங்கம், 1 யூனிட் என்ற கணக்கில் வழங்கப்படும்.

வலைதளம் அல்லது மின்னணு முறையில் மேற்கொள்ளும் முதலீடு களுக்கு, 1 கிராமுக்கு, 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.இதனால், 'கிரெடிட், டெபிட்' கார்டு உள்ளிட்ட மின்னணு பணப் பரிவர்த்தனையில், தங்க சேமிப்பு பத்திரங்களை வாங்குவோருக்கு, ஒரு கிராம், 50 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.

வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், தலைமை அஞ்சலகங்கள் ஆகியவற்றில், தங்க சேமிப்பு பத்திரங்கள் விற்பனை செய்யப் படும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)