பதிவு செய்த நாள்
15 ஏப்2020
23:22
சென்னை:வணிக வரி அலுவலகம் செயல்படாததால், செலுத்திய, ஜி.எஸ்.டி., வரியை திரும்ப பெறுவதில், வணிகர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி., செலுத்திய வணிகர்கள், அவர்களுக்கு சேர வேண்டிய, ‘ரீபண்டு’ என்ற திரும்ப பெறும் தொகையை பெற விண்ணப்பிக்கலாம் என, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது.மாநிலத்தில் உள்ள வணிகர்கள், மத்திய, மாநில, ஜி.எஸ்.டி., செலுத்துவோர் என, இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அவர்களிடம், ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும்.
மேலும், மத்திய ஜி.எஸ்.டி., செலுத்திய வணிகர்கள் சிலருக்கு வழங்கப்படும் ரீபண்டை, மாநில வணிக வரித்துறை, கணக்குகளை சரி பார்த்து, ஒப்புதல் அளிக்கும். அதன் பின்,
அவர்களுக்கான, ‘ரீபண்டு’ தொகையை, மத்திய அரசு அவர்களது கணக்கிற்கு நேரடியாக செலுத்தும்.
இந்நிலையில், ஊரடங்கு அமலில் உள்ளதால், வணிக வரித்துறை அதிகாரிகள் பணிக்கு செல்ல இயலவில்லை. இதனால், வணிகர்கள் ரீபண்டை பெற முடியாத நிலை ஏற்பட்டுஉள்ளது.இதுகுறித்து, வணிக வரி அதிகாரிகள் கூறியதாவது:
‘ரீபண்டு’ பெற, வணிகர்களின் கணக்குகளை, வணிக வரித்துறை சார்பில்பார்த்து, மத்திய அரசுக்கு அனுப்பும். அதன் பின்பே, சம்பந்தப்பட்ட வணிகர்களின் கணக்கிற்கு, ‘ரீபண்டு’ செலுத்தப்படும்.ஆனால், வணிக வரித்துறை அதிகாரிகள் பணிக்கு வராததால், அந்த
வணிகர்களின் கணக்குகளைசரிபார்ப்பதில் சிக்கல்ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர்கள், ‘ரீபண்டு’ பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்த பின், அவர்களது கணக்குகள் சரிபார்க்கப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும்.இவ்வாறு அவர்கள்கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|