பதிவு செய்த நாள்
15 ஏப்2020
23:29
புதுடில்லி:நாடு
முடக்கப்பட்டிருக்கும் நிலையில், 50 லட்சம், ‘லேப்டாப்’ மற்றும்
மொபைல் போன்கள் பழுது நீக்கி தரப்பட வேண்டிய நிலையில் இருப்பதாக,
இத்துறையை சேர்ந்தவர்கள்
கணித்துள்ளனர்.
இதுகுறித்து, இத்துறையை சேர்ந்த நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:நாட்டில்
கிட்டத்தட்ட, 80 கோடி மொபைல் போன்கள் உபயோகத்தில் இருந்து
வருகின்றன. இவற்றில் ஒவ்வொரு மாதமும், 50 லட்சத்துக்கும் அதிகமான
போன்கள், பழுது நீக்கி தரப்பட வேண்டியதாக இருக்கிறது.
பல
நிறுவனங்கள், பழுதுகளை நீக்குவதற்கு, ‘ஆன்லைன்’ மூலமாக சேவைகளை
தந்தாலும், பெரும்பாலான பிரச்னைகளுக்கு, வாடிக்கையாளர்கள்
நேரடியாக பழுது நீக்கும் இடத்துக்குச் செல்ல வேண்டிய நிலை தான்
உள்ளது.நாட்டில், 97 சதவீதம் பிராட்பேண்டு இணைப்புகள் மொபைல்போன் மூலமாகத்தான் செயல்படுகின்றன.
தரவுகளை உபயோகப் படுத்துவதை வைத்து கணக்கிடும்போது மொபைல்போன் பயன்
பாடும் அதிகரித்திருப்பது தெரிய வருகிறது.பழுது நீக்கத்துக்காக வரும் போன்களில்,
71 சதவீதம் போன்கள், ஸ்கிரீன் சேதாரம் சம்பந்தமாக வருகின்றன. இதைஅடுத்து, போனை, ‘ஸ்விட்ச் ஆன்’ செய்வதில் ஏற்படும் பிரச்னைகள்சம்பந்தமாக வருகின்றன.
நாட்டின்
பழுது நீக்கும் சந்தையின் மதிப்பு, கடந்த ஆண்டில், 540 கோடி ரூபாயாக
இருந்தது. கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும், 45 கோடிரூபாய் மதிப்புக்கு, பழுது நீக்கும் வேலைகள்
வருகின்றன.எனவே,
மொபைல் போன் துறையையும் ஊரடங்கு போன்ற காலங்களில்,
அத்தியாவசிய
பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|