பதிவு செய்த நாள்
18 ஏப்2020
02:56

புதுடில்லி : வாகனங்களுக்கான, ஜி.எஸ்.டி.,யை, 10 சதவீதமாக குறைக்க வேண்டும் என, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பான, சியாம், அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
இந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:கொரோனா வைரஸ் தாக்குதலை முன்னிட்டு, நாடு முடக்கப்பட்டதை அடுத்து, வாகன விற்பனை முற்றாக வீழ்ந்துவிட்டது. இதன் காரணமாக, இந்த துறை, நாள் ஒன்றுக்கு, 2,300 கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வருகிறது. இந்த பாதிப்பை சரி செய்ய ஏதுவாக, வாகனங்களுக்கான, ஜி.எஸ்.டி.,யை தற்காலிகமாக, 10 சதவீதமாக குறைக்க வேண்டும்.மேலும், பழைய வாகனங்களை, சாலையிலிருந்து அப்புறப்படுத்த, ஊக்க சலுகைகள் வழங்கி, தேவையை அதிகரிக்க உதவ வேண்டும்.
தேவையை மீண்டும் அதிகரிப்பது தான், மிகச் சவாலான ஒன்றாகும். வாடிக்கையாளர்களின் எதிர்மறை எண்ணங்களை மீறி, வாகனங்களை விற்றாக வேண்டும். எனவே, தற்காலிகமாக, அனைத்து ரக வாகனங்களுக்கும், ஜி.எஸ்.டி.,யை, 10 சதவீதமாக குறைத்து, தேவையை அதிகரிக்க, அரசு வழி செய்ய வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|