டி.சி.எஸ்., நிறுவனமும்  கொரோனாவிடம் சிக்கியது டி.சி.எஸ்., நிறுவனமும் கொரோனாவிடம் சிக்கியது ...  பெட்ரோல் விற்பனை 64 சதவீதம் சரிவு பெட்ரோல் விற்பனை 64 சதவீதம் சரிவு ...
அரசு அறிவிப்பால் சுறுசுறுப்பாகும் மின்னணு வர்த்தக நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2020
03:01

புதுடில்லி : மின்னணு வர்த்தக நிறுவனங்கள், ‘மொபைல் போன், பிரிஜ்’ உள்ளிட்ட சாதனங்களை, 20ம் தேதியிலிருந்து வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளில் சுறுசுறுப்பாக இறங்கியுள்ளன.


மின்னணு வர்த்தக நிறுவனங்கள் மட்டுமின்றி, பிராண்டு நிறுவனங்களும் விற்பனையை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள துவங்கி உள்ளன.மத்திய அரசு, மே 3ம் தேதி வரை, தடையை நீட்டித்திருக்கும் நிலையில், சில பகுதிகளில், சில பொருட்களை விற்கவும், வினியோகம் செய்யவும் அனுமதி வழங்கி உள்ளது.இது குறித்து, மின்னணு நிறுவனங்கள் தெரிவித்து உள்ளதாவது:ஸ்னாப்டீல்: பொருட்களை வாங்குபவர்கள், விற்பவர்கள் என இரு தரப்பினரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் முயற்சியில் முழு வேகத்தில் இறங்கி உள்ளோம்.

கோடை கால ஆடைகள், சமையலறை பொருட்கள், இயர்போன், ஹெட்செட்ஸ், ஹோம் பிரின்டர்ஸ், பள்ளி தேவைக்கான டேப்லெட், வேலைவாய்ப்பு பரீட்சைகளுக்கான புத்தகங்கள் போன்றவற்றுக்கு மிக அதிகளவில் தேவை ஏற்பட்டுள்ளது.மேலும், விற்பனையாளர்களில், 50 சதவீதத்தினர், தங்கள் வணிகத்தை உடனடியாக துவக்க தயாராக இருக்கின்றனர். பலர், கள நிலையை பார்த்துவிட்டு, இறங்க திட்டமிட்டுள்ளனர்.அமேசான்: எங்கள் தளத்தின் விற்பனையாளர்களுக்கு, கமிஷனில் சலுகைகள் தர திட்டமிட்டுள்ளோம். மேலும், பாதுகாப்பான முறையில் பொருட்களை வினியோகம் செய்வது குறித்தும் ஆலோசித்து முடிவுகளை எடுத்து உள்ளோம்.

பிளிப்கார்ட்: லட்சக்கணக்கான விற்பனையாளர்களுடன் பேசி, அவர்களது தயாரிப்புகளை நுகர்வோர்களுக்காக தயாராக வைத்திருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளோம். இதன் மூலமாக, சமூக இடைவெளியை பராமரிப்பதிலும் உதவிகரமாக இருக்கிறோம்.இவ்வாறு தெரிவித்து உள்ளன.மின்னணு வர்த்தக நிறுவனங்கள் மட்டுமின்றி; பிராண்டு நிறுவனங்களும் இந்த சலுகையை, மூச்சு விடுவதற்கான வாய்ப்பாகவே கருதுகின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)