அரசு அறிவிப்பால் சுறுசுறுப்பாகும்  மின்னணு வர்த்தக நிறுவனங்கள் அரசு அறிவிப்பால் சுறுசுறுப்பாகும் மின்னணு வர்த்தக நிறுவனங்கள் ...  தங்க சேமிப்பு பத்திரம் நாளை வெளியிடப்படுகிறது தங்க சேமிப்பு பத்திரம் நாளை வெளியிடப்படுகிறது ...
பெட்ரோல் விற்பனை 64 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2020
03:30

புதுடில்லி : நாட்டின் எரிபொருள்விற்பனை, நடப்பு மாதத்தின் முதற்பாதியில், 50 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டது.


சமையல் எரிவாயுவை தவிர்த்து, நாட்டின் எரிபொருள் விற்பனை, 50 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டுள்ளது. தடை காரணமாக, பயணம் மற்றும் பொருளாதார செயல்பாடுகள் குறைந்துவிட்டதால், எரிபொருள் நுகர்வு கடுமையாக குறைந்துவிட்டது.நடப்பு மாதத்தின் முதல் பாதியில், பெட்ரோல் விற்பனை, 64 சதவீதமும்; டீசல் விற்பனை, 61 சதவீதமும் குறைந்துள்ளன.விமானங்களுக்கான எரிபொருள் விற்பனை, 94 சதவீதம் குறைந்துள்ளது. பெரும்பாலான விமானங்கள் நிறுத்திவைக்கப்பட்டு விட்டதால், இவ்வளவு பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.


பெட்ரோல், டீசல் விற்பனை சரிவைக் கண்டபோதிலும், சமையல் எரிவாயுக்கான தேவை, 21 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏழைகளுக்கு இலவச எரிவாயு வழங்குவதாக அரசு அறிவித்தது, இதற்கு காரணமாக அமைந்தது.ஒட்டுமொத்தமாக, பெட்ரோலிய பொருட்களின் விற்பனை, நடப்பு மாதத்தின் முதல் பாதியில், 50 சதவீதம் சரிந்துவிட்டது.இந்த தரவுகள், பொதுத்துறை நிறுவனங்களின் விற்பனையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்கள், மாதத்தின் முடிவில் விற்பனை நிலவரத்தை வெளியிடுவர் என்பதால், அவை சேர்க்கப்படவில்லை.இதுவரை, இப்படி ஒரு விற்பனை வீழ்ச்சி ஏற்படவில்லை என, இத்துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.கடந்த மார்ச் மாதத்தில், நாட்டின் பெட்ரோலிய பொருட்களின் நுகர்வு, 17.79 சதவீதமாக குறைந்திருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)