பதிவு செய்த நாள்
19 ஏப்2020
02:43
புதுடில்லி : டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த, நார்ட்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தி உள்ளது.டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம், 153 கோடி ரூபாய் கொடுத்து, இந்நிறுவனத்தை கையகப்படுத்தி உள்ளது.
நார்ட்டன், பிரிட்டனின் மிகப் பிரபலமான பிராண்டுகளில் ஒன்றாகும். இந்நிறுவனம், 1898ம் ஆண்டு, ஜேம்ஸ் லான்ஸ்டவுன் நார்ட்டன் என்பவரால் துவக்கப்பட்டதாகும்.நார்டன் மோட்டார்சைக்கிள்கள் அதன் உன்னதமான மற்றும் ஆடம்பர மாடல்களால் மிகவும் புகழ் பெற்றது. இதனுடைய கமாண்டோ மற்றும் 1,200 சிசி சூப்பர் பைக்குகள் அதிக பிரபலமானவை. இது குறித்து, இந்நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர், சுதர்சன் வேணு தெரிவித்துள்ளதாவது:டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் வரலாற்றில் இது ஒரு முக்கியமான தருணம்.
நார்ட்டன் என்பது உலகெங்கிலும் கொண்டாடப்படும் ஒரு பிராண்டு ஆகும். இந்த கையகப்படுத்துதல், உலகளவில் எங்கள் நிறுவனத்தை மதிப்பிட, ஒரு மகத்தான வாய்ப்பை அளித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.நார்ட்டன் அதன் தனித்துவமான பிராண்டு பெயருடனும் அடையாளத்துடனும் தனியாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நார்ட்டன் ஆண்டுக்கு, 500 பைக்குகளை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப பிரத்யேகமாக தயாரித்து விற்பனை செய்து வருகிறது. விலை, 24 லட்சம் ரூபாயிலிருந்து, 43 லட்சம் ரூபாய் வரை ஆகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|