பெட்ரோல் விற்பனை 64 சதவீதம் சரிவு பெட்ரோல் விற்பனை 64 சதவீதம் சரிவு ...  நல்லா போய்க்கிட்டிருந்த நாடும் கொரோனாவால் மாறிய கணிப்பும் நல்லா போய்க்கிட்டிருந்த நாடும் கொரோனாவால் மாறிய கணிப்பும் ...
தங்க சேமிப்பு பத்திரம் நாளை வெளியிடப்படுகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2020
02:47

மும்பை : தங்க சேமிப்பு பத்திரத்தின் வெளியீட்டு விலை, 1 கிராமுக்கு, 4,639 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

முதலீடுஇதுகுறித்து, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்து உள்ளதாவது:’தங்க சேமிப்பு பத்திர திட்டம் 2020 – 2021’ வரிசையில், முதற்கட்ட வெளியீடு, நாளை முதல், 24ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ், 1 கிராம் தங்கம் விலை, 4,639 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், நாளை முதல், 24ம் தேதி வரை முதலீடு செய்யலாம்.இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் தங்க சேமிப்பு பத்திரங்கள் வெளியீடு, ஆறு கட்டங்களாக வெளியிடப் படும் என்றும், இவை ஏப்ரல் 20ம் தேதி துவங்கி செப்டம்பர் மாதம் வரை வெளியிடப்படும் என்றும், கடந்த வாரம், ரிசர்வ் வங்கி தெரிவித்துஇருந்தது. இந்த தங்க சேமிப்பு பத்திரங்களை, மத்திய அரசின் சார்பாக, ரிசர்வ் வங்கி வெளியிடும். டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறையில், இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு, 1 கிராமுக்கு, 50 ரூபாய் தள்ளுபடி தரப்படும்.

இதையடுத்து, கிரெடிட், டெபிட் கார்டு உள்ளிட்ட டிஜிட்டல் முறையில் முதலீடுகளை மேற்கொள்பவர்களுக்கு, 1 கிராம், 4,589 ரூபாய் என, தள்ளுபடி விலையில் வழங்கப்படும். அறக்கட்டளை : மத்திய அரசு, தங்க இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக, 2015, நவம்பரில், தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை அறிவித்தது. இதில், தங்கத்தை, ஆவண வடிவில் சேமிக்கலாம். 1 கிராம் தங்கம், ஒரு யூனிட் என்ற கணக்கில் வழங்கப்படும்.வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், தலைமை அஞ்சலகங்கள் ஆகியவற்றில், தங்க சேமிப்பு பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.

தனிநபர்கள், 1 கிராமில் ஆரம்பித்து, 4 கிலோ வரையிலான தங்கத்தில் முதலீட்டை மேற்கொள்ளலாம். அறக்கட்டளைகள் உள்ளிட்டவை, 20 கிலோ வரை முதலீட்டை மேற்கொள்ளலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)