பதிவு செய்த நாள்
19 ஏப்2020
02:47
மும்பை : தங்க சேமிப்பு பத்திரத்தின் வெளியீட்டு விலை, 1 கிராமுக்கு, 4,639 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
முதலீடுஇதுகுறித்து, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்து உள்ளதாவது:’தங்க சேமிப்பு பத்திர திட்டம் 2020 – 2021’ வரிசையில், முதற்கட்ட வெளியீடு, நாளை முதல், 24ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ், 1 கிராம் தங்கம் விலை, 4,639 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், நாளை முதல், 24ம் தேதி வரை முதலீடு செய்யலாம்.இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் தங்க சேமிப்பு பத்திரங்கள் வெளியீடு, ஆறு கட்டங்களாக வெளியிடப் படும் என்றும், இவை ஏப்ரல் 20ம் தேதி துவங்கி செப்டம்பர் மாதம் வரை வெளியிடப்படும் என்றும், கடந்த வாரம், ரிசர்வ் வங்கி தெரிவித்துஇருந்தது. இந்த தங்க சேமிப்பு பத்திரங்களை, மத்திய அரசின் சார்பாக, ரிசர்வ் வங்கி வெளியிடும். டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறையில், இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு, 1 கிராமுக்கு, 50 ரூபாய் தள்ளுபடி தரப்படும்.
இதையடுத்து, கிரெடிட், டெபிட் கார்டு உள்ளிட்ட டிஜிட்டல் முறையில் முதலீடுகளை மேற்கொள்பவர்களுக்கு, 1 கிராம், 4,589 ரூபாய் என, தள்ளுபடி விலையில் வழங்கப்படும். அறக்கட்டளை : மத்திய அரசு, தங்க இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக, 2015, நவம்பரில், தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை அறிவித்தது. இதில், தங்கத்தை, ஆவண வடிவில் சேமிக்கலாம். 1 கிராம் தங்கம், ஒரு யூனிட் என்ற கணக்கில் வழங்கப்படும்.வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், தலைமை அஞ்சலகங்கள் ஆகியவற்றில், தங்க சேமிப்பு பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.
தனிநபர்கள், 1 கிராமில் ஆரம்பித்து, 4 கிலோ வரையிலான தங்கத்தில் முதலீட்டை மேற்கொள்ளலாம். அறக்கட்டளைகள் உள்ளிட்டவை, 20 கிலோ வரை முதலீட்டை மேற்கொள்ளலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|