பதிவு செய்த நாள்
20 ஏப்2020
08:36
பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களில் கணக்கு துவக்க, பொது விண்ணப்ப படிவங்களை அறிமுகம் செய்வதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது.பி.பி.எப்., செல்வமகள் திட்டம், தேசிய சேமிப்பு சான்றிதழ் உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்கள் பிரபலமாக இருக்கின்றன.
கடந்த ஆண்டு இறுதியில், இந்த திட்டங்களுக்கான விதிமுறைகள் தனித்தனியே மாற்றி அமைக்கப்பட்டன.அஞ்சல் துறை வழங்கும் சிறு சேமிப்பு திட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி படிவங்கள் அறிமுகம் செய்யப்பட்டதால், இவற்றை அச்சிட்டு வினியோகிப்பது உள்ளிட்டவற்றில் சிக்கல் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, சிறு சேமிப்பு திட்டங்கள் அனைத்துக்கும் பொது விண்ணப்ப படிவம் பயன்படுத்தலாம் என, அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இதன்படி புதிதாக கணக்கு துவக்க, கணக்கு துவக்குவதற்கான / சான்றிதழ் வாங்குவதற்கான படிவத்தை பயன்படுத்தலாம்.
மேலும், பணம் செலுத்தும் படிவம், முதிர்ச்சியில் கணக்கை முடிப்பதற்கான படிவம், முன்கூட்டியே கணக்கை முடிக்கும் படிவம், பணம் எடுக்கும் படிவம், கணக்கு நீட்டிப்பு படிவம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம்.நிர்வாக வசதிக்காக பொது படிவங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், ஏற்கனவே வழங்கப்பட்ட பழைய தனி படிவங்களை வாடிக்கையாளர்கள் சமர்ப்பித்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|