பதிவு செய்த நாள்
22 ஏப்2020
03:27
பல்லடம் : ஊரடங்கு உத்தரவால், கடந்த ஒரு மாதத்தில், 1,000 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, விசைத்தறியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
திருப்பூர், கோவை மாவட்டங்களில், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் உள்ளன. தினமும், 1 கோடி மீட்டர் துணிகள் உற்பத்தி செய்யப்படும். ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், விசைத்தறிகள் இயங்காமல் உள்ளன. இதனால், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, விசைத்தறியாளர்கள் தெரிவித்துள்ளனர். திருப்பூர் கோவை மாவட்ட விசைத்தறி சங்க செயலர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், ''தினமும், 30 கோடி ரூபாய் என்ற அடிப்படையில், கடந்த ஒரு மாதத்தில், 1,000 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவித்ததும், 70 சதவீத வெளி மாநில, மாவட்ட தொழிலாளர்கள், சொந்த ஊர் சென்றுவிட்டனர்.
''ஜவுளி உற்பத்தியாளர்கள், நான்கு வார கூலியை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளனர். கூலி அடிப்படையில் தொழில் செய்து வரும் நாங்கள், ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடு செய்ய இயலாமல் தவித்து வருகிறோம்,'' என்றார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|