பதிவு செய்த நாள்
22 ஏப்2020
03:44
புதுடில்லி : தனியார் துறை வங்கியான, சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான, காமகோடியின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதை அடுத்து, அவரது மறுநியமனத்துக்கு, ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கி உள்ளது.
இது குறித்து, சிட்டி யூனியன் வங்கி, கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு தெரிவித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குனராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும், என். காமகோடி உள்ளார். இப்பதவிக்கு இவரை மறுநியமனம் செய்வது குறித்து, ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், காமகோடியை மீண்டும், நிர்வாக இயக்குனராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் மறுநியமனம் செய்வதற்கு, ரிசர்வ் வங்கி தன் இசைவை தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி, தன் இசைவை, கடந்த, 20ம் தேதியன்று, மின்னஞ்சல் மூலமாக தெரிவித்துள்ளது.இதையடுத்து, காமகோடி, மே 1ம் தேதியிலிருந்து, மேலும் மூன்று ஆண்டுகளுக்கு இந்த பதவிகளில் நீடிப்பார்.இவ்வாறு தெரிவித்துள்ளது, சிட்டி யூனியன் வங்கி.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|