பதிவு செய்த நாள்
24 ஏப்2020
02:04
புதுடில்லி : கடந்த, ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், வீடுகள் விற்பனை, 9 முக்கியமான நகரங்களில், 26 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளதாக, வீட்டு தரகு நிறுவனமான, பிராப்டைகர் ஆய்வு தெரிவித்துள்ளது.
ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுஉள்ளதாவது: நாட்டில் உள்ள முக்கிய, ஒன்பது நகரங்களில், அபார்ட்மென்ட் வீடுகள் விற்பனை, 26 சதவீதம் அளவுக்கு, கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் சரிவை கண்டுள்ளது. இதற்கு பொருளாதார மந்தநிலையும், நோய் தொற்றும் முக்கிய காரணம் ஆகும். ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், மொத்தம், 69 ஆயிரத்து, 235 வீடுகள் விற்பனை ஆகியுள்ளன. இதுவே, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில், 93 ஆயிரத்து, 936 வீடுகள் விற்பனை ஆகியிருந்தன.மேலும், புதிய வீடுகள் அறிமுகமும் சரிந்துள்ளது. இவை, கிட்டத்தட்ட பாதியளவு சரிந்துள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், முந்தைய, 72 ஆயிரத்து, 932 என்ற நிலையிலிருந்து, 35 ஆயிரத்து, 668 ஆக குறைந்துவிட்டது.வழக்கமாக மார்ச் மாதத்தில், அதிக அளவில் வீடுகள் விற்பனை இருக்கும். ஆனால், நோய் தொற்று காரணமாக, வீடுகள் விற்பனையில் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|