பதிவு செய்த நாள்
26 ஏப்2020
02:30
மும்பை : நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த, 17ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், எழுச்சியை கண்டுள்ளது.
கடந்த, 17ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, 47 ஆயிரத்து, 957 கோடி டாலராக அதிகரித்துள்ளதாக, இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது, இந்திய மதிப்பில், 36.45 லட்சம் கோடி ரூபாய்.கடந்த, 17ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய பண மதிப்பு அதிகரித்த காரணத்தால், கையிருப்பு அதிகரித்து உள்ளது.ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்து உள்ளதாவது:கடந்த, 17ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு, 309 கோடி டாலர் அதிகரித்து, 47 ஆயிரத்து, 957 கோடி டாலராக உள்ளது.
இதற்கு முந்தைய வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு, 181 கோடி டாலர் அதிகரித்து, 47 ஆயிரத்து, 647 கோடி டாலராக உயர்ந்திருந்தது.மதிப்பீட்டு வாரத்தில் வெளிநாட்டு பணத்தின் மதிப்பு, 155 கோடி டாலர் அதிகரித்து, 44 ஆயிரத்து, 188 கோடி டாலராக உயர்ந்துள்ளது.மேலும், மதிப்பீட்டு வாரத்தில் தங்கத்தின் இருப்பு மதிப்பு, 154 கோடி டாலர் அதிகரித்து, 3,268 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இந்திய மதிப்பில் இது, 2.48 லட்சம் கோடி ரூபாய்.இவ்வாறு, ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|