வளர்ச்சி 1.1 சதவீதம் ‘கேர் ரேட்டிங்ஸ்’ கணிப்பு வளர்ச்சி 1.1 சதவீதம் ‘கேர் ரேட்டிங்ஸ்’ கணிப்பு ...  ‘ஸ்மார்ட் போன்’ விற்பனை 10 சதவீதம் சரியும் ‘ஸ்மார்ட் போன்’ விற்பனை 10 சதவீதம் சரியும் ...
பிராங்க்ளின் டெம்பிள்டன் பிரச்னை பிற நிறுவனங்களுக்கும் சிக்கல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2020
03:42

புதுடில்லி : பிராங்க்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் பண்டு நிறுவனம், அதன், ஆறு பண்டு திட்டங்களை மூடிவிட்ட நிலையில், இது, மேலும் பல பாதிப்புகளை நிதிச் சந்தையில் ஏற்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள்.


பிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனத்தின் இந்த திடீர் முடிவால், கிரெடிட் ரிஸ்க் பண்டுகளில் போட்டிருக்கும் பணத்தை, முதலீட்டாளர்கள் அச்சத்தின் காரணமாக எடுக்க முனைவர். இது, இத்தகைய திட்டங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.மேலும், முதலீட்டாளர்கள் இத்தகைய பண்டுகளில் முதலீடு செய்வதற்கு, ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பர். நிபுணர்கள் கருத்துமுதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்ப பெற எடுக்கும் முயற்சிகளால், சிறிய பண்டு நிறுவனங்கள் பணப் புழக்க நெருக்கடிக்கு ஆளாகும் எனவும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


ஏற்கனவே, கொரோனா பாதிப்புகளால் அச்சமடைந்திருக்கும் முதலீட்டாளர்கள், நிலையான வருமான திட்டங்களில் செய்திருக்கும் முதலீடுகள் குறித்து, எதிர்மறையான மனநிலைக்கு தள்ளப்படுவர். இதற்கு, பிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் முதலீடுகளே சாட்சி என்கின்றனர்.தற்போதைய நிலையில், ஆறு திட்டங்களில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள், பணத்தை பெற காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை. இதன் மூலம், நிறுவனத்தின் பணப்புழக்க சிக்கல் குறைந்து, கொரோனா பாதிப்புகளும் தணிந்து, பொருளாதாரம் மேம்படும்போது, பண்டு நிறுவனங்களால் முதலீட்டை திரும்ப வழங்க இயலும் என்கின்றனர் சில நிபுணர்கள்.


அச்சம் தேவையில்லைஇதற்கிடையே, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆம்பி, இது எதிர்பாராத தனி நிகழ்வு என்றும், கடன் திட்டங்களில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்களின் முதலீடுகள் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)