பதிவு செய்த நாள்
27 ஏப்2020
15:26
கொரோனா, 'லாக்டவுன்' புதிய இயல்பு நிலையாகி இருக்கிறது. இதனால் ஏற்பட்டுள்ள, பொருளாதார தாக்கம் அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதித்திருக்கிறது. லாக்டவுனுக்கு பின்னும் பலவிதங்களில் பாதிப்பு தொடரும் என அஞ்சப்படும் நிலையில், ரொக்கத்தை பாதுகாப்பது, கடன் சுமையை தவிர்ப்பது போன்றவை முக்கியமாகிறது. இந்நிலையில், தனிநபர்கள் நிதி நெருக்கடியை சமாளிக்க பின்பற்ற வேண்டிய வழிகள்:
ரொக்கத்தில் கவனம்: வெளியே செல்லாத சூழலில், செலவுகளில் அத்தியாவசியமானவை எவை, விருப்பம் சார்ந்தவை எவை என்பது புரிந்திருக்கும். இந்த சிக்கனம் தொடர வேண்டும். ரொக்கத்தை கவனமாக கையாள வேண்டும். அனைத்துவிதமான தேவையற்ற செலவுகளையும் குறைப்பது அவசியம். கையிருப்பு நிதி பாதுகாப்பு அளிக்கும்.
பணியிழப்பு: உற்பத்தியும், நுகர்வும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பணியிழப்பு அல்லது ஊதிய குறைப்பு போன்றவை நிகழலாம். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்பு கடினமாகலாம். எந்த மோசமான நிலைக்கும் தயாராக இருப்பது, நெருக்கடிக்கு பிந்தைய காலத்தை சிறப்பாக எதிர்கொள்ள உதவும்.
கடன் சுமை: ஒரு நோய் போல கருதி கடனை தவிர்ப்பது நல்லது. உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து கடன் வாங்குவதை கூட இயன்றவரை தவிர்க்க வேண்டும். 'கிரெடிட் கார்டு' வைத்திருப்பவர்கள் தற்காலிகமாக அதை முடக்கி வைப்பதையும் பரிசீலிக்கலாம். கடனுக்கான தவணைகளில் தவிர்க்காமல் செலுத்தி வர வேண்டும்.
புதிய திறன்கள்: பலரும் வீட்டில் இருந்தே பணியாற்றும் சூழலில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் துறை சார்ந்த புதிய திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதற்காக, 'ஆன்லைன்' பயிற்சி வகுப்புகளை நாடலாம். பகுதிநேர வருமானம் அளிக்க கூடிய திறன்களை கற்றுக்கொள்வதும் நல்ல பலன் தரும்.
முதலீடுகள்: உங்கள் நிதி நிலையை ஆய்வு செய்யுங்கள். நெருக்கடி மோசமானால் கைகொடுக்க வாய்ப்புகளை கண்டறியுங்கள். முதலீடு செய்வதிலும் சரி, முதலீட்டில் இருந்து வெளியேறுவதிலும் சரி அவசரம் காட்ட வேண்டாம். ஊகத்தின் அடிப்படையில் முடிவெடுக்கலாமல், உறுதியுடன் இருந்தால் நெருக்கடியை வெல்லலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|