பதிவு செய்த நாள்
28 ஏப்2020
05:39
புதுடில்லி, ஏப். 28–நாட்டின் வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், கடந்த, 29 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்து, 1.9 சதவீதமாக இருக்கும் என, ’இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச்’ நிறுவனம் தெரிவித்துஉள்ளது.
இந்நிறுவனம், நேற்று இந்தியாவின் வளர்ச்சி குறித்த அதன் மதிப்பீட்டை திருத்தி அறிவித்துள்ளது.இதன்படி, நோய் தொற்று பரவல் மற்றும் நாடு முடக்கப்பட்டிருப்பது ஆகியவை காரணமாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு ஆண்டில், 29 ஆண்டுகளில் இல்லாத வகையில், 1.9 சதவீதமாக குறையும் என வளர்ச்சி கணிப்பை, மேலும் குறைத்து அறிவித்துள்ளது. கடந்த, 1991 – -92ம் ஆண்டில், நாட்டின் வளர்ச்சி, 1.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் மாதத்தில், இந்நிறுவனம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில், 3.6 சதவீதமாக இருக்கும் என, கணித்து அறிவித்திருந்தது. தற்போது அதை, 1.9 சதவீதமாக குறைத்துள்ளது.
ஒருவேளை, தடை நீட்டிப்பு, மே மாத மத்திக்குப் பிறகும் நீடிக்கும்பட்சத்தில், வளர்ச்சியும் ஜூன் இறுதிக்கு பின் ஆரம்பிக்கும் நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், மைனஸ், 2.6 சதவீதமாக இருக்கும்.இது, கடந்த, 41 ஆண்டுகளில் இல்லாத குறைவான வளர்ச்சியாக இருக்கும் என, தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|