பதிவு செய்த நாள்
28 ஏப்2020
05:43
மும்பை : ரிசர்வ் வங்கி, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களுக்கு, 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, சிறப்பு நிதி திட்டத்தை அறிவித்ததை அடுத்து, நேற்று பங்குச் சந்தைகள் உயர்வை சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தையின், சென்செக்ஸ், நேற்று வர்த்தகத்தின் இடையே, 700 புள்ளிகள் அளவுக்கு அதிகரித்தது. வர்த்தகத்தின் இறுதியில், 415.86 புள்ளிகள் அதிகரித்து, 31743.08 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 1.33 சதவீதம் உயர்வாகும்.இதேபோல், தேசிய பங்குச் சந்தையின், நிப்டியும், வர்த்தகத்தின் இறுதியில், 127.90 புள்ளிகள் அதிகரித்து, 9,282.30 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 1.40 சதவீத அதிகரிப்பாகும்.நேற்றைய வர்த்தகத்தில், இண்டஸ் இண்ட் பேங்க் அதிகபட்ச உயர்வைக் கண்டது.
இந்நிறுவன பங்குகள் விலை, 6 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. இதையடுத்து, ஆக்சிஸ் பேங்க், கோட்டக் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவன பங்குகளும் விலை உயர்வை சந்தித்தன.மாறாக, என்.டி.பி.சி., மகிந்திரா அண்டு மகிந்திரா, எச்.டி.எப்.சி. பேங்க், பார்தி ஏர்டெல், ஐ.டி.சி., ஆகிய நிறுவன பங்குகள் விலை சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|