பதிவு செய்த நாள்
28 ஏப்2020
05:45
புதுடில்லி : முகேஷ் அம்பானியின், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ‘வாட்ஸ் ஆப்’ செயலியைப் பயன்படுத்தி, நுகர்வோரையும், மளிகைக் கடைகளையும் இணைக்கும், பரீட்சார்த்த முயற்சியை துவக்கி இருக்கிறது.
‘பேஸ்புக்’ நிறுவனம் அண்மையில், ரிலையன்ஸ் ஜியோ பிளாட்பார்ம் நிறுவனத்தில், 43 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்துள்ளது. இந்த முதலீட்டின் மூலம், ரிலையன்ஸ் ஜியோ பிளாட்பார்ம் நிறுவனம், வாட்ஸ் ஆப் செயலியைப் பயன்படுத்தி, இந்தியாவின், 3 கோடிக்கும் மேற்பட்ட, உள்ளூர் சிறிய கடைகளை, டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில் இறங்க உள்ளது. இதன் பயனாக, நுகர்வோர்கள், வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தி, அருகில் உள்ள கடைகளில், தேவையான பொருட்களை ஆர்டர் செய்து பெற்று கொள்லலாம்.
இதற்கான ஆரம்பகட்ட முயற்சியாக, ஜியோ மார்ட், ஏற்கெனவே, மும்பை நகரின் மூன்று பகுதிகளில், வாட்ஸ் ஆப் மூலம் மளிகை பொருட்களுக்கான ஆர்டரை பெற்று, வினியோகம் செய்து வருகிறது. தற்போது குறிப்பிட்ட சில பகுதிகளில், வாட்ஸ் ஆப் உடன் நுகர்வோரையும், உள்ளூர் கடைகளையும் இணைக்கும் முயற்சியில், ஜியோ பிளாட்பார்ம் இறங்கி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|