பதிவு செய்த நாள்
28 ஏப்2020
22:48
சென்னை : –கடந்த நிதியாண்டில், 2.19 கோடி புதிய தனிநபர் பாலிசிகள் வாயிலாக, 51 ஆயிரத்து, 227 கோடி ரூபாய் பிரீமியம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக, எல்.ஐ.சி., நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:கடந்த 2019 – -20ம் நிதியாண்டில், 2.19 கோடி புதிய தனிநபர் பாலிசிகள் விற்பனை செய்து, இதன் வாயிலாக, 51 ஆயிரத்து, 227 கோடி ரூபாய், பிரீமியம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.ஆறு ஆண்டுகளில், கடந்த நிதியாண்டில் தான், அதிகமான பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.மேலும், எல்.ஐ.சி., ஓய்வூதியம் மற்றும் குழு திட்டங்கள் வாயிலாக, கடந்த நிதியாண்டில் மட்டும், 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான, பிரீமியம் வருவாய் கிடைத்துள்ளது. இதன் படி, கடந்த நிதியாண்டில், குழு பாலிசிகள் பிரீமியம் வாயிலாக, 1.27 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
இது, அதற்கு முந்தைய நிதியாண்டான, 2018 – 19ல், 91 ஆயிரத்து, 179 கோடி ரூபாயாக இருந்தது. இரண்டையும் ஒப்பிடுகையில், 39 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.இது தவிர, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், மார்ச், 31 வரை, 2.03 கோடி முதிர்வடைந்த பாலிசிகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. 7.5 லட்சம் இறப்பு பாலிசி கோரிக்கைகளுக்கு, இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|