தடையால் நபர் ஒன்றுக்கு 7,000 ரூபாய் இழப்பு தடையால் நபர் ஒன்றுக்கு 7,000 ரூபாய் இழப்பு ...  வெளிநாடுகளுக்கு மருந்தை அனுப்ப புளூ டார்ட் புதிய சேவை வெளிநாடுகளுக்கு மருந்தை அனுப்ப புளூ டார்ட் புதிய சேவை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ரிலையன்ஸ் உரிமை பங்குகள் முதன் முறையாக வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2020
22:53

புதுடில்லி, ஏப். 29-முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதன் முறையாக, உரிமை பங்குகளை வெளியிடுவது குறித்து ஆலோசிக்க உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் கடனை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி, செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, உரிமை பங்குகளை வெளியிடுவது குறித்து, நாளை ஆலோசிக்க உள்ளது. இந்நிறுவனத்தின் நிர்வாக குழு நாளை கூடவிருக்கிறது. இக்கூட்டத்தில், 30 ஆண்டுகளில் முதன் முறையாக, உரிமை பங்குகளை வெளியிடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.உரிமை பங்குகள் வெளியீடு என்பது, ஏற்கெனவே பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்களுக்கு, சிறப்பு விலையில், அவர்களிடம் இருக்கும் பங்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பங்குகளை ஒதுக்கி, நிதி திரட்டிக் கொள்வதாகும்.ரிலையன்ஸ், உரிமை பங்குகளை வெளியிடுவது குறித்து, வேறு எந்த தகவல்களையும் வெளியிடவில்லை. நாளை நடைபெற இருக்கும் நிர்வாக குழு கூட்டத்தில், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த கடைசி காலாண்டு அறிக்கையை வெளியிடுவதற்கு ஒப்புதல் அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.ஏற்கனவே, நிறுவனம் அதன் கடனை அடைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக, 'பேஸ்புக்' நிறுவனத்துக்கு, 43 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 9.99 சதவீத, ஜியோ பிளாட்பார்ம் பங்குகளை விற்பனை செய்தது. இந்நிலையில், தற்போது, உரிமை பங்குகளை வெளியிட்டு, அதன் மூலமும் நிதி திரட்ட முயற்சிக்கிறது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)