பதிவு செய்த நாள்
28 ஏப்2020
22:53
புதுடில்லி, ஏப். 29-முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதன் முறையாக, உரிமை பங்குகளை வெளியிடுவது குறித்து ஆலோசிக்க உள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் கடனை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி, செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, உரிமை பங்குகளை வெளியிடுவது குறித்து, நாளை ஆலோசிக்க உள்ளது. இந்நிறுவனத்தின் நிர்வாக குழு நாளை கூடவிருக்கிறது. இக்கூட்டத்தில், 30 ஆண்டுகளில் முதன் முறையாக, உரிமை பங்குகளை வெளியிடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.உரிமை பங்குகள் வெளியீடு என்பது, ஏற்கெனவே பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்களுக்கு, சிறப்பு விலையில், அவர்களிடம் இருக்கும் பங்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பங்குகளை ஒதுக்கி, நிதி திரட்டிக் கொள்வதாகும்.ரிலையன்ஸ், உரிமை பங்குகளை வெளியிடுவது குறித்து, வேறு எந்த தகவல்களையும் வெளியிடவில்லை. நாளை நடைபெற இருக்கும் நிர்வாக குழு கூட்டத்தில், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த கடைசி காலாண்டு அறிக்கையை வெளியிடுவதற்கு ஒப்புதல் அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.ஏற்கனவே, நிறுவனம் அதன் கடனை அடைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக, 'பேஸ்புக்' நிறுவனத்துக்கு, 43 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 9.99 சதவீத, ஜியோ பிளாட்பார்ம் பங்குகளை விற்பனை செய்தது. இந்நிலையில், தற்போது, உரிமை பங்குகளை வெளியிட்டு, அதன் மூலமும் நிதி திரட்ட முயற்சிக்கிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|