பதிவு செய்த நாள்
28 ஏப்2020
22:56
மும்பை, ஏப். 29–புளூ டார்ட் எக்ஸ்பிரஸ் நிறுவனம், வெளிநாட்டில் உள்ளோருக்கு, மருந்துகளை டெலிவரி செய்யும் சேவையை துவக்கி உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:வெளிநாடுகளில் இருக்கும் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு தேவையான மருந்துகளை, அவர்கள் வீட்டிலேயே டெலிவரி செய்யும் வகையில், புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் தகுதி வாய்ந்த மருந்து பரிந்துரைகளை வழங்கி, மருந்துகளை அனுப்பி வாடிக்கையாளர்கள் பயனடையலாம். விமானம் மற்றும் தரைவழி சேவைகள் மூலம், மாநிலங்களுக்கு இடையே பொருட்களை பெற்று வழங்கி வருகிறோம்.
தற்போது மருந்துகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் சேவையை துவக்கி உள்ளோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்துக்கு முன்னதாக, ‘பெடெக்ஸ்’ நிறுவனம் இச்சேவையைத் தொடங்கி, மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவது, குறிப்பிடத் தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|