வெளிநாடுகளுக்கு மருந்தை அனுப்ப புளூ டார்ட் புதிய சேவை வெளிநாடுகளுக்கு மருந்தை அனுப்ப புளூ டார்ட் புதிய சேவை ...  முக கவச வினியோகத்தில்  இந்திய அஞ்சல் நிறுவனம் முக கவச வினியோகத்தில் இந்திய அஞ்சல் நிறுவனம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
அரசின் ஊக்கச் சலுகை எதிர்பார்ப்பில் எகிறிய சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2020
22:59

மும்பை : நிதி நிறுவன பங்குகள் விலை அதிகரித்ததை அடுத்து நேற்று இந்திய பங்குச் சந்தைகள் உயர்ந்தன.

மும்பை பங்குச் சந்தையின், 'சென்செக்ஸ்' நேற்று, 371 புள்ளிகள் அதிகரித்தது. இதற்கு முக்கிய காரணம், அரசு அடுத்த ஊக்க சலுகை அறிவிப்பை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பில், அதிக அளவில், நிதி நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கினர். இதனால் சந்தை உயர்ந்தது. சென்செக்ஸ், வர்த்தகத்தின் இறுதியில், 371.44 புள்ளிகள் அதிகரித்து, 32114.52 புள்ளிகளில் நிலை பெற்றது. இது, 1.17 சதவீதம் உயர்வாகும். வர்த்தகத்தின் இடையே, 32,199.91 புள்ளிகளைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், தேசிய பங்குச் சந்தையின், 'நிப்டி'யும், வர்த்தகத்தின் இறுதியில், 98.60 புள்ளிகள் அதிகரித்து, 9,380.90 புள்ளிகளில் நிலைபெற்றது.நேற்றைய வர்த்தகத்தில், இண்டஸ் இண்ட் பேங்க் அதிகபட்ச உயர்வை சந்தித்தது. இந்நிறுவன பங்குகள், 15 சதவீதம் அளவுக்கு உயர்வை சந்தித்தன.இதையடுத்து, பஜாஜ் பைனான்ஸ், எச்.டி.எப்.சி., ஆக்சிஸ் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், மகிந்திரா அண்டு மகிந்திரா, எஸ்.பி.ஐ., ஆகிய நிறுவன பங்குகளும் விலை உயர்ந்தன.மாறாக, சன்பார்மா, நெஸ்லே இந்தியா, என்.டி.பி.சி., எச்.சி.எல்., டெக், பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவன பங்குகள் சரிவைக் கண்டன.

மியூச்சுவல் பண்டு நிறுவனங்களுக்கு கைகொடுக்கும் வகையில், ரிசர்வ் பேங்க் சிறப்பு நிதி திட்டத்தை அறிமுகம் செய்ததை அடுத்து, நிதி நிறுவன பங்குகள் அதிகம் வர்த்தகம் ஆகின.மேலும், அரசு அடுத்த ஊக்க சலுகையை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பிலும், நிதி நிறுவன பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன.இது பங்குச் சந்தை கள் உயர்வுக்கு வழிவகுத்தது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)