பதிவு செய்த நாள்
28 ஏப்2020
22:59
மும்பை : நிதி நிறுவன பங்குகள் விலை அதிகரித்ததை அடுத்து நேற்று இந்திய பங்குச் சந்தைகள் உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையின், 'சென்செக்ஸ்' நேற்று, 371 புள்ளிகள் அதிகரித்தது. இதற்கு முக்கிய காரணம், அரசு அடுத்த ஊக்க சலுகை அறிவிப்பை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பில், அதிக அளவில், நிதி நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கினர். இதனால் சந்தை உயர்ந்தது. சென்செக்ஸ், வர்த்தகத்தின் இறுதியில், 371.44 புள்ளிகள் அதிகரித்து, 32114.52 புள்ளிகளில் நிலை பெற்றது. இது, 1.17 சதவீதம் உயர்வாகும். வர்த்தகத்தின் இடையே, 32,199.91 புள்ளிகளைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், தேசிய பங்குச் சந்தையின், 'நிப்டி'யும், வர்த்தகத்தின் இறுதியில், 98.60 புள்ளிகள் அதிகரித்து, 9,380.90 புள்ளிகளில் நிலைபெற்றது.நேற்றைய வர்த்தகத்தில், இண்டஸ் இண்ட் பேங்க் அதிகபட்ச உயர்வை சந்தித்தது. இந்நிறுவன பங்குகள், 15 சதவீதம் அளவுக்கு உயர்வை சந்தித்தன.இதையடுத்து, பஜாஜ் பைனான்ஸ், எச்.டி.எப்.சி., ஆக்சிஸ் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், மகிந்திரா அண்டு மகிந்திரா, எஸ்.பி.ஐ., ஆகிய நிறுவன பங்குகளும் விலை உயர்ந்தன.மாறாக, சன்பார்மா, நெஸ்லே இந்தியா, என்.டி.பி.சி., எச்.சி.எல்., டெக், பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவன பங்குகள் சரிவைக் கண்டன.
மியூச்சுவல் பண்டு நிறுவனங்களுக்கு கைகொடுக்கும் வகையில், ரிசர்வ் பேங்க் சிறப்பு நிதி திட்டத்தை அறிமுகம் செய்ததை அடுத்து, நிதி நிறுவன பங்குகள் அதிகம் வர்த்தகம் ஆகின.மேலும், அரசு அடுத்த ஊக்க சலுகையை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பிலும், நிதி நிறுவன பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன.இது பங்குச் சந்தை கள் உயர்வுக்கு வழிவகுத்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|