பதிவு செய்த நாள்
29 ஏப்2020
23:29
புதுடில்லி : மியூச்சுவல் பண்டு நிறுவனங்களுக்கு உதவுவதற்காக, ரிசர்வ் வங்கி அறிவித்த, சிறப்பு நிதி திட்டம், பலனளிப்பது சிக்கலான ஒன்று தான் என, பிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அண்மையில், பிராங்ளின் டெம்பிள்டன் இந்தியா மியூச்சுவல் பண்டு நிறுவனம், அதன் கடன் சார்ந்த, 6 மியூச்சுவல் பண்டு நிறுவனங்களை முடக்கியது.இதனையடுத்து, துறையின் பணப்புழக்கத்தை சரிசெய்ய உதவும் வகையில், ரிசர்வ் வங்கி துரிதமாக செயல்பட்டு, 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கான, சிறப்பு நிதி திட்டத்தை அறிவித்தது.இந்நிலையில், இந்த திட்டம் சிறப்பாக பலன ளிப்பது, வங்கிகளின் கைகளில் தான் உள்ளது என, பிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:ரிசர்வ் வங்கியின் முயற்சி வெற்றி பெறுவது, வங்கிகளின் கைகளில் தான் உள்ளது. ஆனால், வங்கிகள் எந்த அளவுக்கு இவற்றை சிறப்பாக செயல்படுத்த முடியும் என்பது கேள்விக்குறியே.வங்கிகள், குறைந்த மூலதனத்துடன் இருக்கும் நிலையில், அவை எந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்து, மியூச்சுவல் பண்டு துறையினருக்கு கடன் வழங்கும் என்பது தெரியவில்லை. மேலும், வாராக் கடன் அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
ஏற்கனவே, பல மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், அதிக தரம் வாய்ந்த பத்திரங்களை தங்கள் நிதி நெருக்கடிகளை சமாளிப்பதற்காக பயன்படுத்திவிட்டன.இந்நிலையில், பல பண்டு நிறுவனங்களிடம், பட்டியலிடப்படாத பத்திரங்கள் போன்ற குறைந்த பணப்புழக்கம் கொண்ட பத்திரங்கள் மட்டுமே கைவசம் இருக்கும். இவற்றை பிணையாக கொண்டு, கடன் வழங்க வங்கிகள் தயங்கவும் வாய்ப்பிருக்கிறது.இவ்வாறு பிட்ச் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|