முக கவச வினியோகத்தில்  இந்திய அஞ்சல் நிறுவனம் முக கவச வினியோகத்தில் இந்திய அஞ்சல் நிறுவனம் ...  ஊதிய சிக்கலில் சிக்கியிருக்கும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் ஊதிய சிக்கலில் சிக்கியிருக்கும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
இந்திய பங்குச் சந்தைகள் மூன்றாவது நாளாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2020
23:33

புதுடில்லி, : இந்திய பங்குச் சந்தைகள், தொடர்ந்து, மூன்றாவது நாளாக, நேற்றும் உயர்வை சந்தித்துள்ளன.

நிதி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றின் பங்குகள் விலை, உலக சந்தை நிலவரத்தை முன்னிட்டு அதிகரித்த காரணத்தால், தொடர்ந்து, மூன்றாவது நாளாக, பங்குச் சந்தைகள் உயர்வைக் கண்டன.மேலும், ஏப்ரல் மாதத்துக்கான முன்பேர கணக்கு முடிப்பு இன்று நிறைவு பெறுவது, இந்திய ரூபாய் மதிப்பு அதிகரிப்பு ஆகியவையும் சந்தை உயர்வதற்கு வழிவகுத்தன. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், வர்த்தகத்தின் முடிவில், 605.64 புள்ளிகள் அதிகரித்து, 32720.16 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 1.89 சதவீத அதிகரிப்பாகும்.

மேலும் இது, ஆறு வார அதிகரிப்பாகும். வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ், 783.07 புள்ளிகள் வரை அதிகரித்தது.இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும், வர்த்தகத்தின் முடிவில், 172.45 புள்ளிகள் அதிகரித்து, 9553.35 புள்ளிகளில் நிலைபெற்றது. இது 1.84 சதவீதம் அதிகமாகும். நேற்றைய வர்த்தகத்தில், எச்.டி.எப்.சி., நிறுவன பங்குகள் விலை, 7.07 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. இதனையடுத்து, எச்.டி.எப்.சி., வங்கி பங்குகள், 4.87 சதவீதம் அளவுக்கு விலை உயர்வை சந்தித்தன.இதற்கு மாறாக, ஆக்சிஸ் வங்கி, ஆசியன் பெயின்ட்ஸ், எச்.யு.எல்., டைட்டன், நெஸ்லே ஆகிய நிறுவன பங்குகள் விலை சரிவை சந்தித்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)