பதிவு செய்த நாள்
29 ஏப்2020
23:33
புதுடில்லி, : இந்திய பங்குச் சந்தைகள், தொடர்ந்து, மூன்றாவது நாளாக, நேற்றும் உயர்வை சந்தித்துள்ளன.
நிதி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றின் பங்குகள் விலை, உலக சந்தை நிலவரத்தை முன்னிட்டு அதிகரித்த காரணத்தால், தொடர்ந்து, மூன்றாவது நாளாக, பங்குச் சந்தைகள் உயர்வைக் கண்டன.மேலும், ஏப்ரல் மாதத்துக்கான முன்பேர கணக்கு முடிப்பு இன்று நிறைவு பெறுவது, இந்திய ரூபாய் மதிப்பு அதிகரிப்பு ஆகியவையும் சந்தை உயர்வதற்கு வழிவகுத்தன. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், வர்த்தகத்தின் முடிவில், 605.64 புள்ளிகள் அதிகரித்து, 32720.16 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 1.89 சதவீத அதிகரிப்பாகும்.
மேலும் இது, ஆறு வார அதிகரிப்பாகும். வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ், 783.07 புள்ளிகள் வரை அதிகரித்தது.இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும், வர்த்தகத்தின் முடிவில், 172.45 புள்ளிகள் அதிகரித்து, 9553.35 புள்ளிகளில் நிலைபெற்றது. இது 1.84 சதவீதம் அதிகமாகும். நேற்றைய வர்த்தகத்தில், எச்.டி.எப்.சி., நிறுவன பங்குகள் விலை, 7.07 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. இதனையடுத்து, எச்.டி.எப்.சி., வங்கி பங்குகள், 4.87 சதவீதம் அளவுக்கு விலை உயர்வை சந்தித்தன.இதற்கு மாறாக, ஆக்சிஸ் வங்கி, ஆசியன் பெயின்ட்ஸ், எச்.யு.எல்., டைட்டன், நெஸ்லே ஆகிய நிறுவன பங்குகள் விலை சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|